எழுத்தாளர் தொகுப்பு:

காந்தி எனும் கக்கூஸ்காரர்… (பாகம் 2 / 3)

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்)  என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின்  ஆறாம் அத்தியாயம்: ஸ்கேவென்ஜர். ’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் மூன்று பகுதிகளில், இரண்டாம் பகுதி கீழே. (இங்கே முதல் பகுதி) =-=-=-= [... காந்தி எப்போதுமே ஒரு தார்மீக வேகத்தோடு - தேவையான, செய்யப்பட வேண்டிய காரியங்களை அணுகுவதற்குத் தயங்கியதே இல்லை...] … தென் ஆஃப்ரிகாவிலிருந்த வெள்ளையர்கள், இந்தியர்களின் சுகாதாரமின்மை காரணமாகவும் அவர்களை [...]

காந்தி எனும் கக்கூஸ்காரர்… (பாகம் 1 / 3)

… அல்லது காந்தி எனும் துப்புரவுப் பணியாளர், மாசு அகற்றுபவர், தெரு பெருக்குநர், தோட்டி என எவ்வளவோ – ’நாகரீகமாக,’ நாசூக்காக,  இவ்வத்தியாயத்துக்குத் தலைப்பு வைக்கலாம்; மேட்டிமைத் தனத்துடன் நுனி நாக்குப் பேச்சுப் பேசலாம். ஆனால், கக்கூஸ் என்கிற தமிழ்த் திசைச்சொல் அதிகபட்சம் கடந்த 150 ஆண்டுகளாக மட்டுமே பெருவாரியாகப் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்றாலும், எனக்கு தலைப்பிலுள்ள, ’கக்கூஸ்காரர்’ என்கிற மொழியாக்கம் தான் நம்மில் மிகப் பலரின் – மலஜலங்களை  நோக்கும் வெறுப்பு /அருவருப்புப் பார்வையையும், முகம் [...]

காந்தி எனும் நாவிதர்… (பாகம் 2 / 2)

… அல்லது காந்தி எனும் முடிதிருத்துபவர்… “பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின்  ஐந்தாம் அத்தியாயம்: பார்பர். இவ்வத்தியாயத்தின் முதல் பாகம். கீழே இரண்டாம் பகுதி…. =-=-=-= … அவருடைய ஆசிரமங்களில், வெளியிலிருந்து வந்து, நாவிதர்கள் சவரம் செய்தல், முடிவெட்டுதல் என்கிற பேச்சே இல்லை… ஆசிரமவாசிகள், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு அவர்களின் நாவித வேலைகளைச் செய்து கொண்டனர். காந்தி, ஆசிரம [...]

காந்தி எனும் நாவிதர்… (பாகம் 1 / 2)

… அல்லது காந்தி எனும் முடிதிருத்துபவர்… “பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின்  ஐந்தாம் அத்தியாயம்: பார்பர். =-=-=-= அவர் தென் ஆஃப்ரிகாவிற்கு வந்திறங்கிய ஒரு வாரத்தில், தன்னுடைய ஒரு சட்டத் தொடர்பான வேலையின் நிமித்தம், காந்திக்கு, ஒரு பெரிய நகரத்துக்குச் சென்று ஒரு இரவை அங்குக் கழிக்க வேண்டியிருந்தது. அந்நகரத்திற்குச் சென்ற அவர், ஒரு வாடகைக்கார் அமர்த்திக் கொண்டு, [...]

திருவள்ளுவரைக் கொலை செய்தது யார்? ஏன்?? (ஒரு γ ரே ரிப்போர்ட்)

நம் தமிழ்நாட்டில் ஏன் நாம் வன்முறையுணர்ச்சி அதிகமுடையவர்களாக இருக்கிறோம்? பேச்சில், எழுத்தில். செயல்களில், எண்ணங்களில் – அனைத்திலும் வன்முறையேதான். உதாரணத்திற்கு, இந்த இடுகையையே எடுத்துக் கொல்லுங்கள், மன்னிக்கவும் கொள்ளுங்கள். தமிழ வன்முறையின் ஊற்றுக்கண் என்ன? ஏன் இது இப்படியாகியது என நெடுநாள் (மானுட-சமூக-பண்டைஇலக்கிய அகழ்வியல்) ஆராய்ச்சிக்குப் பின், நான் கண்டு பிடித்தது என்னவென்றால் அது திருக்குறள். ஆச்சரியம், ஆச்சரியம்… அது சாட்சாத் திருக்குறளே தான். என்ன இது புது திடுக்குறள் கிளம்புகிறது என யோசிக்கிறீர்களா? எனக்கும் இதனை [...]

∑காந்தி(எதிர்)யம் = ∫{∑f(பார்ப்பன-பனியம், ஜாதிய-ஜட்டியம், அரைவேக்காட்டியம்)}dவெறுப்பியம்

அட என்னடா இது, டர்புர்ரென்று oddஐக் கடித்து modஐக் கடித்து இப்போது தொகையீட்டு நுண்கணிதம் (நம்ம integral calculus தான் அய்யா, இது! ) பக்கமும் வந்து விட்டான் என்று ஒரு மாதிரியாகப் பார்க்காதீர்கள். எல்லாம் உங்கள் பழவினைப் பயன் தான், வேறென்ன சொல்ல! … சமயத்தில் எனக்கு வரும் சில மின்னஞ்சல்கள் (நல்ல வேளை, எனக்கு இம்மாதிரி நிறைய வருவதில்லை) என்னை இப்படிப் பாடாகப் படுத்தி விடுகின்றன; மன்னிக்கவும். முன்னர் இப்படிப் பதிவான கேள்வி(!) – [...]

ஜெயமோகன்: ’காந்தியின் திமிர்’ பற்றிய குறிப்புகள்

(அல்லது) எப்படி நம் தமிழர்கள், மரங்கள் வெட்டப் படுவதைத் தடுத்து நம் சுற்றுப்புறச் சூழலைப் பேணிப் பொலிகிறார்கள்! =-=-=-= பள்ளி, மாணவர்கள், தேர்வுகள், விழாக்கள், தமிழகஅரசுக் கல்வித்துறைக்கு பலமுழ நீள அறிக்கைகள் அனுப்புதல்  – போன்ற வைபவங்கள் எல்லாம் முடிந்து, அடுத்த வருடத்துக்கான பள்ளி/பாடத் திட்டமிடல் செய்து – பின்னர் பள்ளி வளாகச் சரி செய்தல்கள், திட்டங்கள், செப்பனிடல்கள் எல்லாமும் முடிந்து, அயர்ந்தெழுவதற்குள் – மூன்று-நான்கு வாரங்களுக்கு மேல் உருண்டோடி விட்டன… (ஆக, பஹுரூபி காந்தி மொழிபெயர்ப்பு [...]

ஐயா = ஐயோ என்றால், அய்யா = ஐயய்யோ?

பொதுவாக மொழிகள் (மொழியியல், ஒப்பீட்டு மொழியியல் இன்னபிற) பற்றிப் படிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய விஷயம். மேலும், என்னால் இலக்கணசுத்தமாக எழுத எப்போதுமே முடியாவிட்டாலும், எனக்குத் தமிழ் இலக்கணமும் மிகவும் பிடிக்கும் – ஒரு மாதிரியாகப் பார்க்காதீர்கள், என்னை! எனது பள்ளிக்கூடத் தமிழாசிரியர்கள் பெரும்பாலானோரின் தாக்கத்தையும், மடமையயும், பாதிப்பையும் மீறி எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த ஆவல், என் பழவினைப் பயன் தான். இச்சமயம் எனக்கு இலகு தமிழை போதித்த திரு. தெய்வச்செயல் (கார்லி உயர் நிலைப்பள்ளி, [...]

காந்தி: தென்ஆஃப்ரிகா, கருப்பர்கள், சில நிந்தனைகள்…

காந்தி: சில கேள்விகள், ஜெயமோகன், கனிமொழி… (தொடரும் நகைச்சுவை) காந்தி: கேள்வியும், கேனத்தனமும்…. காந்தி ஒரு துரோகியே தான்! =-=-= மேலும் கேள்விகள் (!): 6. அவர் தென் ஆஃப்ரிகாவில்  ஏன் கறுப்பர்களுக்காகப் போராடவில்லை? அய்யா? நீங்கள் நிறையப் படிக்க வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டும்.  உங்களுக்கு சிரத்தையுணர்ச்சி வேண்டும். நீங்கள் எப்படி, எந்த விதமான ஆதாரங்களைக் கொண்டு இப்படி ஆணித்தரமான முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என நான் அறியேன். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், உங்களுக்கு ஒரு [...]

காந்தி ஒரு துரோகியே தான்!

… இதில் ஒரு சந்தேகத்துக்கும் இடமே இல்லை. அய்யாமார்களே, அவரை விட்டு விடுங்கள். நான் தான் அவர் சார்பில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறேனே. மேலும் உபரித் தகவல்கள் பல கொடுத்திருக்கின்றேனே! காந்தியை விட்டு விடுங்கள். =-=-=-= ச. முகம்மது அலி என்பவர், (வே. மதிமாறன் அவர்கள் எழுதியிருக்கும் ‘காந்தி – நண்பரா? துரோகியா?’ என்கிற அறுபத்துனான்கு பக்க புத்தகத்தைப் பற்றி) எழுதியுள்ள நூல் அறிமுகம் படித்தேன். இறும்பூதடைந்தேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? பொதுவாக, இணையத்தில் பேச்சுக்களுக்கும், ‘டமிள் [...]

Follow

Get every new post delivered to your Inbox.