<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>ஒத்திசைவு...</title>
	<atom:link href="http://othisaivu.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://othisaivu.wordpress.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 21 Feb 2012 14:48:41 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='othisaivu.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>ஒத்திசைவு...</title>
		<link>http://othisaivu.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://othisaivu.wordpress.com/osd.xml" title="ஒத்திசைவு..." />
	<atom:link rel='hub' href='http://othisaivu.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்&#8230; (அய்யோ!)</title>
		<link>http://othisaivu.wordpress.com/2012/02/20/post-94/</link>
		<comments>http://othisaivu.wordpress.com/2012/02/20/post-94/#comments</comments>
		<pubDate>Mon, 20 Feb 2012 04:41:04 +0000</pubDate>
		<dc:creator>ramasami</dc:creator>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[தமிழர் பண்பாடு]]></category>
		<category><![CDATA[துபுக் கிவிதை]]></category>
		<category><![CDATA[ரசக்குறைவான நகைச்சுவை]]></category>

		<guid isPermaLink="false">http://othisaivu.wordpress.com/?p=887</guid>
		<description><![CDATA[சில நாட்கள் முன், எங்கள் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர்களை, தமிழக அரசு நடத்தும் ‘செய்முறைத் தேர்வு’க்காக, ஒரளவு பெரிய பரிசோதனை-ஆய்வகம் உள்ள, விழுப்புரத்தில் இருக்கும் இன்னொரு பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தேன்; என்னிடம் பி.எட் போன்ற ‘கல்வியியல்’ தொடர்பான தகுதிகள் எதுவும் இல்லாததால், நம்முடைய அரசின் பார்வையில் நான், சில விஷயங்கள் படிப்பிக்க லாயக்கில்லாதவன். (&#8230; இதனை நான் ஒரளவுக்கு ஒப்புக் கொள்கிறேன்.கூட) ஆகவே, நான் ’பாவமாக’  நீளமான தாடியுடனும், பஞ்சடைத்த கண்ணுடனும் அப்பள்ளிக்கு வெளியில் ஒரு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=887&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>சில நாட்கள் முன், எங்கள் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர்களை, தமிழக அரசு நடத்தும் ‘செய்முறைத் தேர்வு’க்காக, ஒரளவு பெரிய பரிசோதனை-ஆய்வகம் உள்ள, விழுப்புரத்தில் இருக்கும் இன்னொரு பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தேன்; என்னிடம் பி.எட் போன்ற ‘கல்வியியல்’ தொடர்பான தகுதிகள் எதுவும் இல்லாததால், நம்முடைய அரசின் பார்வையில் நான், சில விஷயங்கள் படிப்பிக்க லாயக்கில்லாதவன்.<br />
(&#8230; இதனை நான் ஒரளவுக்கு ஒப்புக் கொள்கிறேன்.கூட)</p>
<p>ஆகவே, நான் ’பாவமாக’  நீளமான தாடியுடனும், பஞ்சடைத்த கண்ணுடனும் அப்பள்ளிக்கு வெளியில் ஒரு டீக்கடையின் அருகில் காத்துக் கொண்டிருக்கும் போது &#8211; ஒரு குடிமகனுடன் (இவர் என் மாணவர் ஒருவரின் மாமா, திமுக உறுப்பினர்)  சிறிது அளவளாவ நேரிட்டது &#8212; தமிழக அரசியல்வாதிகள் சொல்வது போல ‘<em>மரியாதை நிமித்தமாக</em>.’</p>
<p>ஆனால் மிகவும் பொறுக்கமுடியாத விதத்தில், இம்மனிதர் ஒரு முழு நேர மகாமகோ புலம்பல்வாதியாக இருந்தது என் ஊழ்வினைப்பயன் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல &#8211; ’என்னத்த&#8230; பண்ணி&#8230; என்னத்த செஞ்சு’ என்பது தான் அவர் பல்லவி அனுபல்லவி சரணம் எல்லாமே &#8211; ஒரு சில ஒதுக்கப்பட வேண்டிய (கருணாநிதி. திருமாவளவன், சீமான் போன்ற) விஷயங்களைத் தவிர.</p>
<p>நான் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை அனைத்து முயற்சிகளும் செய்தேன், மெய்யாலுமே! ஆனால், அவர் மாபெரும் அவநம்பிக்கை வாதியாக இருந்தார்,<br />
(&#8230;இதனை நான் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை; தவிர எனக்கு மூத்திரம் முட்டிக் கொண்டு வேறு இருந்தது!).</p>
<p>இவர் மாதிரி, வாழ்க்கையை அணுகும் முறை, போதை மட்டும் தொடர்பானதாக எனக்குத் தோன்றவில்லை. எனக்குத் தெரிந்து மிகப் பலர் இப்படித் தான் இருக்கிறார்கள், என் செய்வது. இம்மாதிரியினர் ஒரு ஈர்க்குச்சியையும் நகர்த்த மாட்டார்கள். ஆனால் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, எல்லாவற்றைப் பற்றியும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.<br />
&#8230;<br />
எது எப்படியொ, நான் அவரைக் கொலை செய்திருக்க வேண்டியதற்குப் பதிலாக&#8230; இதோ ஒரு <strong>விசன துபுக் கிவிதை.</strong></p>
<p style="text-align:center;">=-=-=-=</p>
<p><strong>என்னத்த செஞ்சு&#8230;</strong></p>
<p>ஸார், ஸார், ராம்ஸாமி டீச்ர் ஸார்<br />
வாங் ஸார், எப்டி கீறீங்<br />
(<em>அண்ணாச்சி, ஸாரு நம்ம பள்ளிக்கொட வாத்யாரு</em>)<br />
எங்க ஸார் இங்<br />
இம்மா ந்தூரம் வந்துக்றீங்<br />
(<em>ஸாருக்கு ஸூடா ஒர் பெஸல் டீ கொட்பா</em>)<br />
ஒ பஸங் க்ளுக்கு பர்ச்சைங்ளா<br />
(<em>பேப்ர் கப்ல கொட்பா, ஸார்க்கு களுவாத் க்ளாஸ் வோணாம்</em>)</p>
<p>ஸூடா ஃப்ரெஸ் மீன் பஜ்ஜி ஸாப்ட்றீங்ளா ஸார்<br />
(<em>டேய், அய்யாவுக்கு பேப்ர்ல வெச்சி கொட்றா</em>)<br />
ஏங் ஸார் வோணாமா, நல்லார்கும், ஸும்மா சாப்டுங்<br />
(<em>அப்போ அண்ணே, அத்தை எங் கிட்ட கொடுங்</em>)<br />
நீங்க ல்லாம் பெர்ய பட்ப்பு பட்சுக் றீங்<br />
பெர்ய தாடி வுட்டுக் றீங்<br />
என்னமோ ஒங்ளுக்கு கெட்ட காலம்<br />
இப்டி நம் விளுப்ரம்ல லோல் பட்ணும்னிட்டு<br />
(<em>அட, ஸாருக்கு ஒரு பட்ர் பிஸ்கீட்டு கொடுங் பா</em>)<br />
ஒங் மொகத்ல ஒர் ஒளி கீது ஸார்&#8230;<br />
&#8230;<br />
அட போங்க ஸார். ஒண்மையத் தான் ஸார் ஸொல்றேன். குடிக்ல ஸார்.<br />
&#8230;<br />
பஸங் நல்லா படிக்றாங்ளா? மெய்யாவா?<br />
&#8230;<br />
அந்தக் காலம் மாத்றீ இல்ல ஸார்&#8230; படிக்வே மாட்றாங் பஸங்<br />
&#8230;<br />
அந்தக் காலம் வேற, இந்தக் காலம் வேற ஸார், பேரளிவு வேற 2012ல வர்ரப்போவுத் ஸார்<br />
&#8230;<br />
என்ன ஸார், முப்பத் அஞ் வயஸ், ஏன் கேக்றீங்<br />
&#8230;<br />
ஆங் ஸார், நான் அந்தக் கால மூணாங்லாஸ் ஸார்<br />
&#8230;<br />
அப்பாரு கிட்ட முந்த்ரிக்காட் ஸார். ஒக்காந்த் ஸாப்ட்லாம் ஸார்.<br />
&#8230;<br />
அத்த ஏன் ஸார் கேக்றீங்<br />
&#8230;<br />
இப்போ எங்கிட்ட அடியில் கண்ட ஸொத்து தான் ஸார். பொண்டாட்டி வேல செய்து.- ஆனா குட்க பணம் கேட்டாக்க ராங் பண்து ஸார். பணத்திமிர் ஸார்.<br />
&#8230;<br />
நமக்கு கச்சி வேல இருக்து ஸார், ஏதோ ஓட்த்து ஸார் வண்டி.<br />
&#8230;<br />
நாட்ல அல்லாரும் அயோக்கியன் ஸார் (<em>அண்ணே, டவுட் தனபால் பட்கிறீங்ளா?</em>)<br />
&#8230;<br />
அதெல்லாம் வேலைக் காவாது ஸார்!<br />
&#8230;<br />
இன்னா ஸார் சொல்றீங்க<br />
&#8230;<br />
நான் சொல்றேன்னிட்டு தெப்பா நெனக்காதீங்க (<em>தலைவா, ஆண்டிப்பண்டாரம் என்ன பாட்றார் இண்ணிக்கு?</em>)<br />
&#8230;<br />
த பார்றா ஸார் ஜோக்கு அடிக்றார், அடியில் கண்ட ஸொத்த விக்க முட்யுமா (<em>என்ன அண்ணாச்சி?</em>)<br />
&#8230;<br />
அல்லாரையும் நிக்வெச்சு சுட்ணும் ஸார்<br />
&#8230;<br />
இந்த் நாட் உர்ப்டாத் ஸார், இன்னிக்கு நான் ஸொல்றேன் (<em>அண்ணாச்சீ த பாருங்க, ‘விபச்சார வளக்கில் நடிகை’ &#8211; நாட் எங் போற்து? அட, இந்தப் பொண்ணை எங்யோ பாத்தாப்ல கீதே! நம்ம பாண்டீ மினிஸ்டர் கூட</em>)<br />
&#8230;<br />
எங்க பாத்தாலும் ஊளல் ஸார்.<br />
&#8230;<br />
அர்ஸியல்வாதீங்ள திர்த்தவே முட்யாத் ஸார்<br />
&#8230;<br />
அத ஏன் கேக்றீங்க<br />
&#8230;<br />
கலைஞ்சர் பெர்ய ஆள் தான் ஸார். இந்த வயஸ்ல எம்மா ஸினிமாப்டம் கதெ வஸ்னம் எள்தறார்! என்னா ஒளப்பு ஸார்!<br />
&#8230;<br />
ஆனா வெள்ளைக்கார்னுவ ஆச்சீல இர்ந்திருக்ணும் ஸார்.<br />
&#8230;<br />
நூர் காந்தி வந்தாளும் திர்த்த முட்யாத் ஸார்<br />
&#8230;<br />
அதுக் நான் என்ன செய்றேனா? ஏன் ஸார் இப்டி கேட்டுப் டீங்க!  கோச்சுகாதீங் ஸார், (<em>தம்பி, தினகரன் கொட்பா</em>)<br />
&#8230;<br />
என்னா ஸார், எங்கிட்ட நல்ல நியூஸ்கூட இருக்து ஸார்&#8230;<br />
&#8230;<br />
லங்க ப்ரச்னை கடோஸீல ஸால்வ்ட். திர்மாவளவன் பப்ளிக்கா திட்னார், ராஜபச்சை நடுங்க்ட்டார். கட்லூர் கூட்டம்ல திர்மா எவ்ளோ ஆவேஸமா பேஸ்னார் தெர்யுமா! என்னமா மீஸை முறுக்றார் ஸார் அவ்ரு! அவ்ரு தான் ஸார் ஒர்ஜ்னல் தமிளர் தளைவர்&#8230; ஸர்யா ஸார்?<br />
(<em>அட, ஸார் கோவமா இருந்தாரு, இப்பொ வாய் வுட்டு ஸிரிக்றார் பார்ரா, ஸார்க்கு இன்னொண்ணு டீ கொட்றா</em>)<br />
&#8230;<br />
ஆங், ஜீமான் கூட அப்டித்தான் ஸார். அவ்ருக்கு எம்மாம் பெர்ய ப்ளக்ஸ் போர்டு வச்ருக்காங்; ஆனா உண்மை ஸொல்ணும்னாக்க அவ்ர்க்கு திர்மா மீஸை கிட்ட வர்முட்யாத் ஸார்&#8230;<br />
&#8230;<br />
அட ஸார், திர்ம்பி ஸிர்க்கிறீங்! எப்டியோ, ஸார் நம்ம கட்சிக்கு வந்த்டார்பா. (<em>அண்ணாச்சீ ஸார்க்கு, இன்னோர் பஜ்ஜி?</em>)<br />
&#8230;<br />
என்னா ஸார், ஸும்மா சாப்டுங் &#8211; வோணாம்க்றீங்ளா? என்ஜாய் பண்ங் ஸார்&#8230; ஒங் வூட்ல நாங் ஸொல்லிக்றேன்.<br />
&#8230;<br />
வாள்கைய அனுபவிக்ணும். நம்ம கலைஞ்சர் அய்யா பொளந்த் கட்டி எளுதினார் பார்ங் &#8211; ஓத்தாத்தான் கொளந்த, உஸுரு பொறக்கும்னிட்டு (<em>என்ன ஸொல்றீங் அண்ணாச்சீ?</em>)<br />
..<br />
அட இண்ணா ஸார் இப்டி கேட்டுப்டீங்? டாஸ்மாக்கு ரொம்ப் தூர்ம் ஸார்&#8230;<br />
&#8230;<br />
ஸெம்மொளீ மாநாட்ல ஸார் &#8211; விளுப்ரம்லெர்ந்து ப்ரீயா 50 பஸ் விட்டாங். எவ்ளோ ஜோரா பிர்யாணி போட்டாங் ஸார், கலைஞ்சர் அய்யா. அப்போதான் ஸொன்னார் அப்டீ &#8211; ப்ற்ப் ஓக்கும் அல்லா உஸுர்க்கும்னிட்டு &#8211; பஸ்ல எல்லாம் போட்ருக்காங், நீங்தான் படிக்ல &#8211; ஆனா ஸார்லாம் பைக்ல தான் போவீங் இல்யா&#8230; அப்போ பஜ்ஜி நான் எடுத்கட்டா ஸார்.  ஆறிக்னு கீது ஸார்&#8230; வேஸ்டாவக் டாத் பார்ங்க.<br />
&#8230;<br />
டீக்கட அண்ணாச்சி ஸும்மனாச்சிக்கும் ஸொல்றார். நான் ஒண்ணும் மப்ல இல்ல! ஆப்பு போட் ஒர் மணி நேர்மாய்டிச்&#8230;  நெஸம்மாத்தான்&#8230; நெனவோட் தான் கீறேன் ஸார்&#8230; ஊத்றேன் பார்ங்க, ப்ப்ப்பூ &#8211; நெடி வர்தா?<br />
&#8230;<br />
ஆமா. கலைஞ்சர் ஸொன்னா ஸெய்வார் தான், இப்பொ நீங்க் என்ன ஸொல்ல வர்றீங்?<br />
&#8230;<br />
ரொம்பக் குறும்ப் ஸார் ஒங்ளுக்கு.  அவ்ருக்கு அது தாஸ்தீதான் &#8211; அல்லாம் மச்சம்<br />
&#8230;<br />
அவ்ரு இல்லாகாட்டி அந்தம்மா தெனாவட் ரொம்ப் ஆய்டும் ஸார்.<br />
&#8230;<br />
இன்னா ஸார் நாஞ் ஸொல்றது? (அண்ணாச்சி, டீ துட், பஜ்ஜிக் அவ்ரு &#8211; ஸாரு கொடுத்ருவாரு, சர்யா கணக்?) என்னா ஸார் நாங் ஸொல்றத்&#8230;<br />
&#8230;</p>
<p><strong>(தொடரும்&#8230;) புலம்பல் முதல்வாதம் ஒழிக&#8230; (அல்லது) ஒரு பரிதாபத்துக்குரிய துபுக் கிவிதை&#8230;</strong></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/othisaivu.wordpress.com/887/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/othisaivu.wordpress.com/887/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/othisaivu.wordpress.com/887/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/othisaivu.wordpress.com/887/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/othisaivu.wordpress.com/887/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/othisaivu.wordpress.com/887/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/othisaivu.wordpress.com/887/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/othisaivu.wordpress.com/887/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/othisaivu.wordpress.com/887/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/othisaivu.wordpress.com/887/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/othisaivu.wordpress.com/887/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/othisaivu.wordpress.com/887/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/othisaivu.wordpress.com/887/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/othisaivu.wordpress.com/887/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=887&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://othisaivu.wordpress.com/2012/02/20/post-94/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b62814c6b255ed12bc7368885f18a79a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">ramasami</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>காந்தி எனும் உழைப்பாளி</title>
		<link>http://othisaivu.wordpress.com/2012/02/02/post-93/</link>
		<comments>http://othisaivu.wordpress.com/2012/02/02/post-93/#comments</comments>
		<pubDate>Thu, 02 Feb 2012 04:38:53 +0000</pubDate>
		<dc:creator>ramasami</dc:creator>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[காந்தியாயணம்]]></category>
		<category><![CDATA[காந்தியின் பன்முகங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://othisaivu.wordpress.com/?p=870</guid>
		<description><![CDATA[“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பந்தியொபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் முதல் அத்தியாயம் காந்தி எனும் உழைப்பாளி இந்த சுறுசுறுப்பான, மிகுந்த வேலையுள்ள (படு &#8216;பிசி&#8217;யான) வழக்குரைஞர், தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு புகட்டிய அறிவுரை: நீங்கள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யாமல், நீதி மன்றங்களுக்கு வெளியே உங்கள் வழக்குகளை, சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவருடைய ஓய்வு நேரத்தில்அவர் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸீக்கள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=870&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பந்தியொபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் <strong>முதல்</strong> அத்தியாயம்</p>
<p style="text-align:center;"><span style="text-decoration:underline;"><strong>காந்தி எனும் உழைப்பாளி</strong></span></p>
<p>இந்த சுறுசுறுப்பான, மிகுந்த வேலையுள்ள (படு &#8216;பிசி&#8217;யான) வழக்குரைஞர், தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு புகட்டிய அறிவுரை:</p>
<blockquote><p><em>நீங்கள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யாமல், நீதி மன்றங்களுக்கு வெளியே உங்கள் வழக்குகளை, சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.</em></p></blockquote>
<p>அவருடைய ஓய்வு நேரத்தில்அவர் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸீக்கள் , பவுத்தர்கள் போன்ற மதத்தினரின் நூல்களைப் படித்தார். மற்ற ஞானிகளின், அறிஞர்களின் புத்தகங்களையும் கற்றறிந்தார்.</p>
<p>இம்மாதிரிப் புத்தகங்களைப் படித்ததினாலும்,  தன்னுள் அமிழ்ந்து ஆழ்ந்து சிந்தித்ததாலும அவருக்குத் உறுதி ஏற்பட்டது / தோன்றியது: <em></em></p>
<blockquote><p><em>ஒவ்வொருவரும், ஒவ்வொருநாளும் மூளை சார்ந்த உழைப்பில் மட்டும் ஈடுபடாம<em>ல்</em>, சிறிது   உடலுழைப்பில் ஈடுபடவேண்டும் என்பது. மேலும் படித்தவர்களும், படிக்காதவர்களும், மருத்துவர்களும், வழக்குரைஞர்களும், நாவிதரும், கழிவுகள் அகற்றுபவரும் &#8211; இவர்கள் அனைவரும் சமமான சம்பளம் பெறவேண்டும் என்பதும்.</em></p></blockquote>
<p>அவர் கொஞ்சம் கொஞ்சமாக, தன் நண்பர்களுடனும், குடும்பத்துடனும், ஒரு ஆசிரமத்தில்,  தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டார். அவருடைய சில ஐரோப்பிய நண்பர்களும் அவருடன் ஆசிரம வாழ்க்கையில் ஈடுபட விழைந்தனர். அவர்கள் அனைவரும் கடினமாக உழைக்கும், தற்சார்புடைய விவசாயிகளைப் போல &#8211; பண்ணை நிலத்தை உழுதனர், பழத் தோட்டங்களை  உருவாக்கினர், பராமரித்தனர். அவர்கள் தங்கள் பண்ணையில், கூலிக்காகத் தொழிலாளிகளை நியமிக்க வில்லை.</p>
<p>ஹிந்துக்களும் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் பார்சீக்களும், பிராமணகளும் சூத்திரர்களும், தொழிலாளிகளும் வழக்குரைஞர்களும், வெள்ளையர்களும் கறுப்பர்களும் &#8211; அனைவரும் ஒரு பெரிய குடும்பத்தின் அங்கத்தினர் போல வாழ்ந்தனர் &#8211; ஒரு பொது உண்ணுமிடத்தில, ஒரு பொது சமையலறையில் சமைத்த உணவைச் சாப்பிட்டனர். அவர்களுடைய உணவு எளிமையானதாக இருந்தது; அவர்கள எளிய  உடை கரடு முரடாக இருந்தது.</p>
<p>அவர்கள் அனைவருக்கும் மாதாந்திர செலவினங்களுக்காக நாற்பது ரூபாய் கொடுக்கப் பட்டது. அந்த வழக்குரைஞரும், அவர் மாதாமாதம் (அக்காலத்திலேயே)  நாலாயிரம் ரூபாய் சம்பாதித்தும், அதே நாற்பது ரூபாயைத்தான் பெற்றுக் கொண்டார் பிரதி மாதமும். அவர் அனுதினமும் ஒரு கடினமான வேலை முறையை, நேரம் தவறாமல், துல்லியமாகக் கடைப் பிடித்தார் &#8211; ஒரு நாளுக்கு ஆறு மணிநேரங்களே தூங்கினார்.</p>
<p>ஆசிரமத்தில் ஒரு குடிசை கட்டப் பட்டால், அவர் தான் முதலில் கூரைச் சட்டங்களின் மேல் ஏறிப் பணி புரிபவராக இருப்பார். அவர் அப்போது பலவித ஆணிகள் நிறைய பையுறைகள (&#8216;பாக்கெட்டுகள்&#8217;) கொண்ட உழைப்பாளிகளின் கரடுமுரடான நீல வண்ண மேலாடை போட்டுக் கொண்டிருப்பார. ஒரு பையுறையிலிருந்து சுத்தி ஒன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு சிறிய அரமும, ஒரு துளையிடும் எந்திரமும் அவர் அரைக்கச்சை வார்ப்பட்டையிலிருந்துத் (&#8216;பெல்ட்&#8217;) தொங்கிக் கொண்டிருக்கும்.., தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு அவர் பொரிக்கும் வெயிலில், தன் சுத்தியுடனும், அரத்துடனும் பணி புரிந்தார்..</p>
<p>ஒரு நாள் உணவிற்குப் பின் அவர் ஒரு புத்தக அலமாரி உருவாக்க ஆரம்பித்தார். ஏழு மணிநேரக் கடின உழைப்புக்குப் பின் அவர் மேற் கூரை வரை எட்டிய அந்த அலமாரியைச் செய்து முடித்தார்.</p>
<p>ஒரு சமயம், ஆசிரமத்துக்கு வழியாக இருந்த பாதை கருங்கல் ஜல்லி போட்டுச் செப்பனிட வேண்டியருந்தது. ஆனால் அப்போது அவரிடம் அதற்குத் தேவையான பணம் இல்லை. ஆகவே அவர் ஒவ்வொரு நாளும் ஆசிரமத்துக்கு வெளியே நடை பழகச் சென்று, திரும்பி வரும்போது எல்லாம, சிறிய சிறிய கற்களை பொறுக்கிக் கொணர்ந்துச் சேமித்தார். அவருடைய சக தோழர்களும் அவ்வாறே செய்தனர். ஆக, அவரால் மற்றவர்களை இக்காரியத்தில் ஈடுபடுத்த முடிந்ததால்,  விரைவில் சாலை போடுவதற்கான கருங்கல் குவிக்கப் பட்டது.</p>
<p>ஆசிரமத்தில் வசித்த குழந்தைகள் கூட, சமையல செய்தல், தோட்டவேலை, துப்புரவு செய்தல, அச்சுக் கோர்த்தல், மரவேலை, தோல் வேலை போன்றவற்றில் பங்கு கொண்டனர்.</p>
<p>இவ்வழக்குரைஞர், அதிகாலையில், ஒரு கை இயந்திரத்தில் கோதுமையை அரைத்த பின், உடை மாற்றி கொண்டு, ஐந்து மைல் நடந்து தன் அலுவலகத்தை அடைவார். தன்னுடைய தலை முடியைத் தானே திருத்திக் கொள்வார், தன் துணிகளைத் தானே துவைத்துக் கொள்வார், தானே இஸ்திரி போட்டுக் கொள்வார். இரவு முழுவதும் கண் துஞ்சாமல் கொள்ளைநோயால் (பிளேக் வியாதி) பீடிக்கப் பட்டச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு செவிலி வேலை செய்வார். ஒரு தொழு  நோயாளியின் ரணங்களைச் சுத்தம் செய்வார். கழிப்பிடங்களைச் சுத்தம் செய்வதற்குத் தயங்கவே மாட்டார்.</p>
<p>அவர் சோம்பேறித் தனத்தையோ, பயத்தையோ, வெறுப்பையோ, காழ்ப்பையோ, வன்மத்தையோ, துவேஷத்தையோ அறிந்ததே இல்லை&#8230;</p>
<p>அவர் தன்னுடைய பத்திரிக்கைக்குக் கட்டுரைகள் எழுதினர்; தானே அவற்றைத் தட்டச்சு செய்தார். பின், தானே தன்னுடைய அச்சகத்தில் அச்சுக் கோர்த்தார். அவசியம் ஏற்பட்டால் அச்சகத்தின் கை விசையால் ஓட்டப் பட்ட யந்திரத்தை இயக்கவும் உதவி புரிந்தார். அவர் புத்தகங்களைச் சேர்த்துப் பிணைத்துக் கட்டுவதில் (பைண்டு) செய்வதில் வல்லவர்.</p>
<p style="text-align:center;"><a href="http://othisaivu.files.wordpress.com/2012/02/binder.gif"><img class="aligncenter  wp-image-871" title="binder" src="http://othisaivu.files.wordpress.com/2012/02/binder.gif?w=318&#038;h=289" alt="" width="318" height="289" /></a></p>
<p>க்ரியா சக்தி மிகுந்த நுண்ணுணர்வு பாதிக்க வைக்கும் கட்டுரைகளையும், தலையங்கங்களையும் எழுதிய அந்தக் கை &#8211; இராட்டையில் நூல் நூற்றது, தறியில் பின்னியது, நெசவு செய்தது, புதிய சமையல் வகைகளைச் செய்தது, ஊசியை நுணுக்கமாக உபயோகித்தது, பழ மரங்களையும் காய்கறிச் செடிகளையும் பராமரித்தது, நிலத்தைச் சீராக உழுதது, கிணற்றில் இருந்து நீரைச் சேந்தியது, மரங்களை இழைத்தது, வண்டியில் இருந்து மிகுந்த கனமான பொருட்களை இறக்கியது&#8230;</p>
<p>சிறையில் இருந்த போது, அவர் இருநாக்கோடரியால் (&#8216;பிக்-அக்ஸ்&#8217;) கடினமான, கட்டாந்தரையைத் தோண்ட வேண்டிஇருந்தது, கிழிந்த துப்பட்டித் துண்டுகளை ஒன்பது மணி நேரங்களுக்குத் தைக்க வேண்டியிருந்தது; அவருக்கு அயர்வாக இருந்தபோதெல்லாம் அவர் கடவுளிடம் தனக்கு பலம் கொடுக்கும் படி பிரார்த்தனை செய்தார். தனக்கு அளிக்கப் பட்ட, ஒப்படைக்கப் பட்ட எந்த வேலையையும் முடிக்காமல் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டதே இல்லை.</p>
<div></div>
<div>அவர் பல  சமயங்கள், அருகிலுள்ள ஒரு நகரத்திலிருந்த கடைக்குச் சென்று சில பொருட்கள் வாங்க,   நாற்பது மைல்கள் நடந்திருக்கிறார். ஒரு சமயம், ஒரே நாளில் ஐம்பத்தைந்து மைல்கள் நடந்திருக்கிறார். அவர் ஒரு தன்னார்வ தூக்குக் கட்டில் (ஸ்ட்ரெச்சர்)  ஊழியராகப் போர் முனையில் பணி புரிந்த போது, அடிபட்ட போர் வீரர்களை முப்பது-நாற்பது மைல்களுக்குத் தொடர்ந்து தூக்கிச் சென்றிருக்கிறார். அவர் 78 வயதினராக இருந்த போதும் கூட, வாரக் கணக்கில் நாளுக்கு 18 மணி நேரம் உழைத்திருக்கிறார். சில சமயங்களில் அவர் வேலை நேரம் 21 மணி நேரங்களுக்குக் கூட நீடித்திருக்கிறது.</div>
<div></div>
<div></div>
<div>அவ்வயதில், அவரால் நூல் நூற்றல் தவிர, மிகுந்த உடலுழைப்பு செய்ய முடியாமல் இருந்தது &#8211; ஆனால், அப்படியும் வெறும் காலுடன் (காலணி அணியாமல்) அவரால் மூன்றிலிருந்து ஐந்து மைல்கள் தினம்  நடக்க முடிந்தது &#8211; குளிர் மிகுந்த விடிகாலைகளில், பனி  தோய்ந்த கிராமப் பாதைகளினூடே&#8230;</div>
<div></div>
<div></div>
<div>அவருடைய பணி முனைவுக்கான ஆற்றலையும, பணி மீதான அர்பணிப்பையும் கொண்டுதான் &#8211; அவர் &#8216;கர்மவீரர்&#8217; என்கிற பட்டத்தை அவருடைய தென்னாப்பிரிக்கத் தோழர்களிடமிருந்து பெற்றார்.</div>
<div></div>
<div></div>
<div>கர்மவீரர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் பிறந்தது 1869ல் அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் அன்று.</div>
<div></div>
<div></div>
<div><a href="http://othisaivu.wordpress.com/page-4/">காந்தியாயணம்…</a></div>
<div></div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/othisaivu.wordpress.com/870/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/othisaivu.wordpress.com/870/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/othisaivu.wordpress.com/870/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/othisaivu.wordpress.com/870/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/othisaivu.wordpress.com/870/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/othisaivu.wordpress.com/870/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/othisaivu.wordpress.com/870/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/othisaivu.wordpress.com/870/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/othisaivu.wordpress.com/870/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/othisaivu.wordpress.com/870/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/othisaivu.wordpress.com/870/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/othisaivu.wordpress.com/870/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/othisaivu.wordpress.com/870/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/othisaivu.wordpress.com/870/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=870&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://othisaivu.wordpress.com/2012/02/02/post-93/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b62814c6b255ed12bc7368885f18a79a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">ramasami</media:title>
		</media:content>

		<media:content url="http://othisaivu.files.wordpress.com/2012/02/binder.gif" medium="image">
			<media:title type="html">binder</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>&#8220;பஹுருபி காந்தி&#8221;  &#8211; முன்னுரை</title>
		<link>http://othisaivu.wordpress.com/2012/01/27/post-92/</link>
		<comments>http://othisaivu.wordpress.com/2012/01/27/post-92/#comments</comments>
		<pubDate>Fri, 27 Jan 2012 10:16:48 +0000</pubDate>
		<dc:creator>ramasami</dc:creator>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[காந்தியாயணம்]]></category>
		<category><![CDATA[காந்தியின் பன்முகங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://othisaivu.wordpress.com/?p=864</guid>
		<description><![CDATA[“பஹுரூபி காந்தி” &#8220;பஹுருபி காந்தி&#8221;  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பந்தியொபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட புத்தகத்தின் அறிமுகம் (1964ல் வெளியிடப் பட்டது); அனு பந்தியொபாத்யாய் அவர்களின் முன்னுரையின் தமிழாக்கம் இந்த புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி 1949-ல் இருந்து என்னிடம் இருக்கிறது. நான் 1948-ல் வங்காளத்தில் இருந்த கஸ்தூரிபா பயிற்சி முகாமை விட்டுவிட்டு இருக்கும்போது  டி ஜி டெண்டுல்கரின்  புத்தகமான &#8216;மகாத்மா&#8217;வின் கையெழுத்துப் பிரதியைப் படித்தேன். அப்போது நான் ஒரு கிராமத்தில் பணி செய்து [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=864&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a title="“பஹுரூபி காந்தி”" href="http://othisaivu.wordpress.com/2012/01/01/post-90/">“பஹுரூபி காந்தி”</a></p>
<p>&#8220;பஹுருபி காந்தி&#8221;  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பந்தியொபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட புத்தகத்தின் அறிமுகம் (1964ல் வெளியிடப் பட்டது);</p>
<p><span style="text-decoration:underline;">அனு பந்தியொபாத்யாய் அவர்களின் முன்னுரையின் தமிழாக்கம்</span></p>
<p>இந்த புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி 1949-ல் இருந்து என்னிடம் இருக்கிறது. நான் 1948-ல் வங்காளத்தில் இருந்த கஸ்தூரிபா பயிற்சி முகாமை விட்டுவிட்டு இருக்கும்போது  டி ஜி டெண்டுல்கரின்  புத்தகமான &#8216;மகாத்மா&#8217;வின் கையெழுத்துப் பிரதியைப் படித்தேன். அப்போது நான் ஒரு கிராமத்தில் பணி செய்து கொண்டு இருந்தபோது, அங்கே கிராமத்து மக்களும், மாணவிகளும், காந்திஜி அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே தெரிந்து கொண்டு இருப்பதை அறிந்தேன்.அவர்கள் காந்தி ஜெயந்தியைக் கொண்டாடினர், நூல் நூற்றனர், பிரார்த்தனை செய்தனர். அவர்களில் சிலர் தேசீய இயக்கத்தில் பங்கு பெற்று சிறைக்குச் சென்றவர்கள் கூட &#8211; ஆனால் அவர்களுக்கு எது காந்திஜியின் உண்மையான பங்களிப்பு என்பது தெரிந்திருக்கவில்லை என நினைத்தேன்  -. ஒரு வேளை நான் இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்னவோ, ஆனால் எனக்கு அப்போது அப்படித்தான் தோன்றியது.</p>
<p>நான் இப்போதும் கூட அப்படியே உணர்கிறேன் &#8211; நான் தினமும் பார்க்கும் பெரும்பாலானவர்கள் அனைவரும், இவர்களில் சிலர் கல்வியறிவு பெற்றவர்கள் கூட -  உடலுழைப்பை வெறுத்து ஒதுக்குகின்றனர். நானும் உடலுழைப்பின் மேன்மையை போற்றுபவன் அல்லன் &#8211; இருந்தாலும் நான் உடலுழைப்பின் கஷ்டத்தை உணர்ந்தவன்.  அதனால் தான் நான் பிரதி தினமும் சிறிதளவு உடலுழைப்பில், பணி செய்பவர்களுடன் ஈடு படுகிறேன் &#8211; மேலும், கொஞ்சம் பணத்தைக் கொடுத்தால் மற்றவர்களை எனக்கு வேலை செய்ய வைக்க முடியும் என்கிற அதிகார மனப்பான்மையை நான் வளர்த்துக் கொள்ளாமலிருக்கவும் தான்.</p>
<p>தங்கள் வாழ்வாதாரங்களுக்காக பலவேறுபட்ட வேலைகளில் ஈடுபட்டு வருபவர்களின் உழைப்பில் தன்னார்வத்துடன், சுய அர்பணிப்புடன் பங்கு கொண்டவரான காந்திஜியை, நான் காண்பிக்க விரும்பினேன். ஆக, இப்புத்தகத்தில் சில விவரிப்புகள் ஒரு முறைக்கு மேல் திருப்பிச் சொல்லப் பட்டுள்ளன.  நான் நிச்சயமாக, காந்திஜியைக் கண் மூடித்தனமாக வழிபாடு வழிபாடு செய்பவர்களின் கும்பலுக்கு ஆள் சேர்க்க விரும்பவில்லை. ஆனால் நான் நம் நாட்டு இக்கால இளைஞர்களை &#8211; காந்திஜியை &#8216;தேசப் பிதா&#8217;வாகவோ அல்லது நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவராகவோ மட்டும் பார்த்து &#8211; விமர்சனம் செய்வதற்கு அப்பாற்பட்டு சிந்திக்க வைக்க வேண்டும் என விரும்புகிறேன்.</p>
<p>இந்தப் புத்தகத்துக்கான கரு என்னுடையது தான். நான் இதனை முதிரா இளைஞர்களுக்காக (teenagers) எழுதினேன். இந்தப் புத்தகத்தின் பெரும்பாலான பகுதிகள் டி ஜி டெண்டுல்கரின் &#8216;மகாத்மா&#8217; புத்தகத்தைச் சார்ந்து எடுக்கப் பட்டுள்ளன &#8211; இதற்காக, என்னுடைய இச்சிறிய புத்தகத்திற்காக நான் எவ்வளவு டெண்டுல்கர் அவர்களிடம் கடன் பட்டிருக்கிறேன் என்பதை நான் விவரிக்க இயலாது.</p>
<p>என் கூச்சத்தினால் இந்தப் புத்தகத்தின் பதிப்பித்தல் தாமதமாகியது. திரு என் ஜி ஜோக் (N. G. Jog), முனைவர் பி ஆர் ஷென் ( Prof PR Sen) அவர்கள் தயை கூர்ந்து இதன் கையெழுத்துப் பிரதியைப் படித்துப் பார்த்தனர். திரு எம் சலபதி ராவ் (M. Chalapathi Rau) அவர்கள் எனக்கு, இப்புத்தகத்தின் இருபது அத்தியாயங்களை/அறிமுகங்களை ஒரு தொடராக நேஷனல் ஹெரால்டில் பதிப்பிக்க உதவி செய்தார்.</p>
<p>திரு ஆர் கே லக்ஷ்மன் அவர்களுக்கு அவர் வரைந்து தந்த படங்களுக்காக நன்றிக் கடன் பட்டுள்ளேன்.</p>
<p>ஜவஹர்லால்ஜி அவர்களுக்கு, முன்னுரை எழுதித் தந்தமைக்காக மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.</p>
<p>இப்புத்தகத்தைப் படிப்பவர்களில், ஆயிரம் இளைஞர்களில் ஒரு இளைஞராவது காந்திஜியின் பணிகளை. வேலைகளைச் செய்தால், நான் மகிழ்ச்சியடைவேன்.</p>
<p>அனு பந்தியொபாத்யாய் (ஏப்ரல், 1964)</p>
<p><a href="http://othisaivu.wordpress.com/page-4/">காந்தியாயணம்…</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/othisaivu.wordpress.com/864/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/othisaivu.wordpress.com/864/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/othisaivu.wordpress.com/864/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/othisaivu.wordpress.com/864/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/othisaivu.wordpress.com/864/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/othisaivu.wordpress.com/864/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/othisaivu.wordpress.com/864/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/othisaivu.wordpress.com/864/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/othisaivu.wordpress.com/864/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/othisaivu.wordpress.com/864/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/othisaivu.wordpress.com/864/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/othisaivu.wordpress.com/864/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/othisaivu.wordpress.com/864/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/othisaivu.wordpress.com/864/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=864&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://othisaivu.wordpress.com/2012/01/27/post-92/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b62814c6b255ed12bc7368885f18a79a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">ramasami</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அரம்&#8230;</title>
		<link>http://othisaivu.wordpress.com/2012/01/06/post-91/</link>
		<comments>http://othisaivu.wordpress.com/2012/01/06/post-91/#comments</comments>
		<pubDate>Fri, 06 Jan 2012 05:04:11 +0000</pubDate>
		<dc:creator>ramasami</dc:creator>
				<category><![CDATA[ஆஹா!]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[ரசக்குறைவான நகைச்சுவை]]></category>

		<guid isPermaLink="false">http://othisaivu.wordpress.com/?p=853</guid>
		<description><![CDATA[&#8230; அல்லது இப்படியாகத் தானே! இக்கதையின் நாயகி, பேயவள் காண் எங்கள் அன்னை ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மனே! =-=-=-= முன் தினமே புயல் வரப் போவது தெரியும். அதனால் என்ன என்கிற அசட்டை, நம் பள்ளி என்ன கடலில் இருந்து பல கிமீ தூரத்தில் இருக்கிறதே; ஆக ஒரு பிரச்சினையுமில்லை என்கிற எண்ணம். பள்ளிக் குழந்தைகளின் அரையாண்டுப் பரீட்சை விடைத் தாள்களைத் திருத்த வேண்டும் வேறு. நான் அரசுப் பாடபுத்தகங்களை (இவை நம் தமிழக அரசின் &#8216;சமச்சீரழிவுக் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=853&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8230; அல்லது இப்படியாகத்<strong><em> தானே</em></strong>!</p>
<p>இக்கதையின் நாயகி, பேயவள் காண் எங்கள் அன்னை ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மனே!</p>
<p style="text-align:center;"><strong>=-=-=-=</strong></p>
<p>முன் தினமே புயல் வரப் போவது தெரியும். அதனால் என்ன என்கிற அசட்டை, நம் பள்ளி என்ன கடலில் இருந்து பல கிமீ தூரத்தில் இருக்கிறதே; ஆக ஒரு பிரச்சினையுமில்லை என்கிற எண்ணம்.</p>
<p>பள்ளிக் குழந்தைகளின் அரையாண்டுப் பரீட்சை விடைத் தாள்களைத் திருத்த வேண்டும் வேறு.</p>
<p>நான் அரசுப் பாடபுத்தகங்களை (இவை நம் தமிழக அரசின் &#8216;சமச்சீரழிவுக் கல்வி&#8217; சார் புத்தக ஆபாசங்கள்; கருணாநிதியின் கைங்கர்யம்) அறவே  உபயோகிக்காமல் வேறு பல விதங்களில் &#8216;பாடம்&#8217; நடத்தியதால் &#8211; குழந்தைகள், நிச்சயம் அரையாண்டுத் தேர்வு நடத்த வேண்டும், அப்போது தான் அதில் தாங்கள் எவ்வளவு புரிந்து கொண்டிருக்கிறோம் என்று தெரியும் என்று <em>அடம் பிடித்ததால்</em> வந்த வினை.</p>
<p><em>விளைவு</em>: ஒவ்வொரு மாணவனும் மாணவியும் தங்களுக்கு இஷ்டப்பட்டவைகளை, தாங்கள் பின்புலம் தேடிப் படித்தவை, கலந்து-பேசி ஆலோசித்தவை, கனவு காண்பவை &#8211; பற்றி அரசியல் / சமூகவியல் / அறிவியல் / வரலாறு / புவியியல் / கணிதம் சார்ந்து விலாவாரியாக எழுத &#8211; எனக்கு  90 விதமான கையெழுத்துகளில் சுமார் 800 பக்கங்கள் படிக்க வேண்டும், மதிப்பிட வேண்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் ஒரு பக்கமாவது நேர்மையாக பதில் குறிப்புக் கொடுக்க வேண்டும்! ஐயோ!</p>
<p>ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மணி நேரம் ஒதுக்கினாலும் கூட சுமார் நூறு மணிநேரமாவது ஆகும், இந்த விடைத் தாள்களைத் &#8216;திருத்தி&#8217; முடிக்க. ஒரு நாளுக்குப் பனிரெண்டு மணிநேரம் &#8216;திருத்தினாலும்&#8217; 8 நாட்களாகும். கடவுளே!</p>
<p>ஒரு பிரமையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன், அன்று டிசம்பர் 29, 2011.</p>
<p style="text-align:center;">=-=-=-=</p>
<p>பின் மாலை வாக்கில், எங்கள் பள்ளியில் வசித்துக் கொண்டிருந்த பறவைகள் அனைத்தும் (சுமார் 30 வகையின) மாலைக்குள்ளாகவே எங்கோ பறந்து போய் விட்டிருந்தன. இதனைப் பற்றியும் நான் யோசித்திருக்க வேண்டும்.</p>
<p>புயல் வரவைக் கருதி, மரங்கள் அடர்ந்த பகுதியானதால், கிராமப் புறமானதால், எங்கள் குடியிருப்பில் மின்சாரமும் இல்லை. ஒரே கும்மிருட்டு தான், சிள்வண்டுகளின் ரீங்காரம் கூட இல்லை. ஆஹா, நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்று விண் தொலைநோக்கியை எடுத்து வந்தால் ஒரு இருபது நிமிடங்களில் வானம் மேகங்களால் மூடப் பட்டு விட்டது.</p>
<p>அது ஒரு நிசப்தமான முன் இரவு &#8211; ஆனால் காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.</p>
<p>பின் இரவெல்லாம் காதைப் பிளக்கும் புயற்காற்றின் பேரோசை. நூற்றுக் கணக்கான நாயனங்கள் உச்ச ஸ்தாயியில் அபஸ்வர ஒலமிடுவதைப் போல. வேறொன்றுமே கேட்க வில்லை.</p>
<p>ஏதேதோ குழப்பமான எண்ணங்கள், அந்த சப்தத்துக்கு இடையில் நான் தூங்கியும் இருக்கிறேன், அதிகாலை பட்சி ஜாலமற்ற திகைப்புக்குரிய திருப் பள்ளி எழுச்சி.</p>
<p>வெளியில் வந்தால், ஆஹா என்று விழுந்து கிடந்தன பலவிதமான வானளாவிய மரங்கள்;</p>
<p>நன்கு வளர்ந்திருந்த நாகலிங்க, குந்துமணி  மரங்களும், புங்கனும்.கருங்காலியும், ஆல மரங்களும் <em>வேரோடு</em> பிடுங்கப் பட்டு தூக்கி எறியப் பட்டிருந்தன.  வாழைகளும், முந்திரிகளும், முருங்கையும், தைலமும், சவுககும் <em>எம்மாத்திரம்</em>!</p>
<p>பல மரங்கள் மொட்டையாக, அவைகள் வாழைப் பழத் தோலி உரிக்கப் பட்டது போல் &#8211; கிளைகளையும் இழந்து, மரப் பட்டைகளையும் இழந்து காட்சி அளித்தன.</p>
<p>மரங்கள் பலவற்றிலிருந்து பால் சொட்டிக் கொண்டிருந்தது. இரண்டாக உடைந்த ஒரு மாபெரும் வேப்ப மரத்திலிருந்து தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. அதன் வேர்களுக்குத் அதுவரை தெரிந்திருக்கவில்லை அம்மரத்தின் சகாப்தம்  முடிந்து விட்டது என்று. துக்கம் நெஞ்சை அடைத்தது.</p>
<p style="text-align:center;">=-=-=</p>
<p>எங்கள் பள்ளி வளாகத்திலேயே சுமார் 80 மாபெரும் மரங்கள் வீழ்ந்தன. சில சுவர்கள் உடைந்தன. பல கூரைகள் இல்லாமல் ஆகின. மின்சாரம் வருவற்கு குறைந்த பட்சம் இன்னும் இரு வாரங்களாகும்&#8230;</p>
<p>அழகான, அமைதியான நிழல் தரும் மரங்கள் இருந்த பள்ளியில்,  திடீரென்று இளம் காலையிலேயே ஒரே வெளிச்சம். சூரிய ஓளி கண்ணை உறுத்தியது. வெப்பம் தகித்தது.</p>
<p>பள்ளி யை அவசியம் சீக்கிரம் திறக்க வேண்டும். அரசுப் பரீட்சைக்கு செல்லப் போகும் பனிரெண்டாம், பத்தாம் வகுப்பினருக்கு மிக முக்கியமான சமயம் இது. அவர்கள் வீடுகளில் பெரும்பாலும் படிப்பதற்கான, முனைவதற்கான சூழல் இல்லை.</p>
<p>எப்படி இச்சேதங்களை எதிர் கொள்ளப் போகிறோம் என்று மலைப்பாக இருந்தது.</p>
<p style="text-align:center;">=-=-=</p>
<p>எதிர் கொள்ளலா? நின்று யோசிக்க நேரம் இல்லை. உழைப்பு ஒன்று தான் வழி.</p>
<p>இரண்டாம் &#8216;உலகப்&#8217; போர் சமய ஜெர்மனிய படுகொலைத் தளங்களில் எழுதியிருந்தது போல, ஒரே வழி: &#8216;arbeit macht frei&#8217; &#8211; &#8216;உழைப்பு விடுதலை செய்யும்&#8217; தான்.</p>
<p>கடந்த ஆறு நாட்களாக வீழ்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதே வேலை. நன்றாக முதுகு ஒடிக்கும், அதற்கும் மேலாக மனதை மிக வேதனை படுத்தும் செயல்.</p>
<p>சுற்று வட்டாரத்தில் சங்கிலி அரங்களின் ஓயாத ஓலங்கள்; தப் தப் என்று மரத் துண்டுகள் விழும் சப்தங்கள். அறுக்கப் பட்ட, கழிக்கப் பட்ட கிளைகள் மற்ற கிளைகளின் மீது விழும் நாராச உரசல்கள். மாமரங்களின் வெட்டப் பட்ட சவங்கள் இழுத்துச் சென்று அடுக்கப் படும் காட்சிகள்.</p>
<p>புழுதியினூடே, பறக்கும் மரத்தூள்களின் படலத்தினூடே, இவைகளைப் பார்த்து, வெட்டப் பட்ட மரங்களில் இருந்து பொங்கி வழியும் மரச்சாறுகளை முகர்ந்து, சப்தங்களைக் கேட்டு -  சிறிது நேரம் கழித்து மனம் வெறுமையாகி விடுகிறது.</p>
<p>ஓரளவு அபரிமிதமான உடலுழைப்புக்குப் பின்பு, உடல் அயர்ந்து விடுகிறது. ஆனால் மனமும் மூளையும் விடாமல் உந்தி, காரியங்களை நிறைவேற்ற வைக்கின்றன &#8211; யோசிப்புக்கும் அசை போடுதலுக்கும், இடமே கொடுக்காமல். கசாப்புக் கடையில் பணி புரிபவர்களின் மனோ நிலையும்  இப்படித் தானோ என்னவோ&#8230; தொடர்ந்த வேலை.</p>
<p>சுமார் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இப்படி வேலை செய்த பின் &#8211; கால்கள் தள்ளாடி, பஞ்சின் மேல் நடப்பதைப்  போல இருக்கும். காக்கைக் குளியல் முடிந்து பெயருக்கு உண்டு விட்டு 6 மணிக்கு படுக்கையில் விழுந்த அடுத்த நிமிடம் நிர்மலமான, கனவுகளற்ற சமாதி நிலை.</p>
<p>ஆக சுமார் இரண்டு வருடங்களுக்கு எங்கள் பள்ளிக்கு மதிய உணவு, காலை மாலை சிற்றுண்டிகள் செய்வதற்கும் விறகு தயார்.</p>
<p>பள்ளி விடுமுறையானாலும் வந்திருந்த சக ஆசிரியர்கள், ஊழியர்கள், குழந்தைகள் &#8211; அனைவரும் அசாத்தியமாக  உழைத்தனர்.  சில சமயம் தோன்றுகிறது  அனைவரின் கூட்டுறவை, அன்பை, தங்கள் இடத்திற்கு கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுக்க சில சமயங்களில் அவல நிலைகளும் முக்கிய பங்கினை ஆற்றுகின்றனவோ என்று.</p>
<p>எது எப்படியோ, .சுவர்கள் மதில்கள், வீடுகள் -  உயிரினங்கள் (மக்கள் உட்பட) பெருத்த சேதமின்றித் தப்பின, எங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் என்பது நம்ப முடியாமல் இருக்கிறது.</p>
<div class="wp-caption aligncenter" style="width: 160px"><img title="ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மன்" src="http://www.classic-lawns.co.uk/client/150/stihl_018_ms180_12in.jpg" alt="ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மன்" width="150" height="150" /><p class="wp-caption-text">ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மன்</p></div>
<p>எங்கள் பள்ளியின் நேரத்தை வீணடிக்காத, குட்டி தெய்வமாகிய, ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மனே, உனக்கு அம்மானை புனைந்து பாட வயதோ நேரமோ இல்லை. ஆகவே உன்னை வாழ்த்தி வணங்குகிறேன். (மன்னிக்கவும்: இச் சுவரொட்டி கலாச்சாரத்திற்கு)</p>
<p>நீயில்லாவிட்டால் எங்களுக்கு குறைந்தது இரு மாதங்களாகியிருக்கும், பள்ளி வளாகத்தைச் சரி செய்வதற்கு.</p>
<p>கடைசியாக, இரு விஷயங்கள்:</p>
<p><strong>ஒன்று:</strong> மீண்டும், பறவைகள் வந்துவிட்டன கடந்த இரு நாட்களில்; சொற்ப மரங்களே இருந்தாலும் அவைகளின் ஜாலத்திற்குக் குறைவே இல்லை.</p>
<p><strong> இரண்டு:</strong> நான் இனிமேல் தான் விடைத் தாள்களைத் திருத்த வேண்டும். (ஐயகோ, எம் கை அர நிலையைப் பாரீர்!)</p>
<p><strong>பின் குறிப்பு:</strong> &#8216;<a href="http://www.jeyamohan.in/?page_id=5392">அறம்</a>&#8216; என்ற தலைப்பின் கீழ், அழகான சிறுகதைகளை(யும்) எழுதியிருக்கும் ஜெயமோகன் அவர்கள் என்னை மன்னிக்கவும்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/othisaivu.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/othisaivu.wordpress.com/853/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/othisaivu.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/othisaivu.wordpress.com/853/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/othisaivu.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/othisaivu.wordpress.com/853/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/othisaivu.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/othisaivu.wordpress.com/853/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/othisaivu.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/othisaivu.wordpress.com/853/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/othisaivu.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/othisaivu.wordpress.com/853/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/othisaivu.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/othisaivu.wordpress.com/853/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=853&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://othisaivu.wordpress.com/2012/01/06/post-91/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b62814c6b255ed12bc7368885f18a79a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">ramasami</media:title>
		</media:content>

		<media:content url="http://www.classic-lawns.co.uk/client/150/stihl_018_ms180_12in.jpg" medium="image">
			<media:title type="html">ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>&#8220;பஹுரூபி காந்தி&#8221;</title>
		<link>http://othisaivu.wordpress.com/2012/01/01/post-90/</link>
		<comments>http://othisaivu.wordpress.com/2012/01/01/post-90/#comments</comments>
		<pubDate>Sun, 01 Jan 2012 05:21:55 +0000</pubDate>
		<dc:creator>ramasami</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[காந்தியாயணம்]]></category>
		<category><![CDATA[காந்தியின் பன்முகங்கள்]]></category>
		<category><![CDATA[புத்தகம்]]></category>
		<category><![CDATA[யாம் பெற்ற பேறு....]]></category>

		<guid isPermaLink="false">http://othisaivu.wordpress.com/?p=833</guid>
		<description><![CDATA[காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள் என்று இப்புத்தகத்தின் பெயரைத் தமிழ்ப் படுத்தலாம். &#8220;பஹுரூபி காந்தி&#8220;  என்கிற இச்சிறிய புத்தகம் அனு பந்தியொபாத்யாய் என்பவரால் எழுதப் பட்டது &#8211; இதனை நான் முதலில் படித்தது சுமார் நாற்பதாண்டுகட்கு முன்பு. ஆனால் இப்போது படிக்கும் போதும், அதே பிரமிப்பு தான் எனக்கு. அடிப்படையில் இது சிறார்களை, இளைஞர்களைக் குறி வைத்து எழுதப் பட்டது.அவர்களது கலைக்கப் படாத உள்ளுணர்வுகளுக்கு. கலங்காத நேர்மைக்கு, மகத்தானக் குறிக்கோட்கள் நோக்கிய மனிதநேயம் சார்ந்த முனைப்புகளுக்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=833&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள் என்று இப்புத்தகத்தின் பெயரைத் தமிழ்ப் படுத்தலாம்.</p>
<div id="attachment_834" class="wp-caption aligncenter" style="width: 160px"><a href="http://othisaivu.files.wordpress.com/2011/12/bahuroopi.jpg"><img class="size-full wp-image-834" title="bahuroopi" src="http://othisaivu.files.wordpress.com/2011/12/bahuroopi.jpg?w=530" alt=""   /></a><p class="wp-caption-text">அட்டைப் படம்: &quot;பஹுரூபி காந்தி&quot; Bahuroope Gandhi -  Written by : Anu Bandopadhyaya First Published : April 1964</p></div>
<p>&#8220;<a href="www.arvindguptatoys.com/arvindgupta/bg.pdf">பஹுரூபி காந்தி</a>&#8220;  என்கிற இச்சிறிய புத்தகம் அனு பந்தியொபாத்யாய் என்பவரால் எழுதப் பட்டது &#8211; இதனை நான் முதலில் படித்தது சுமார் நாற்பதாண்டுகட்கு முன்பு. ஆனால் இப்போது படிக்கும் போதும், அதே பிரமிப்பு தான் எனக்கு.</p>
<p>அடிப்படையில் இது சிறார்களை, இளைஞர்களைக் குறி வைத்து எழுதப் பட்டது.அவர்களது கலைக்கப் படாத உள்ளுணர்வுகளுக்கு. கலங்காத நேர்மைக்கு, மகத்தானக் குறிக்கோட்கள் நோக்கிய மனிதநேயம் சார்ந்த முனைப்புகளுக்கு &#8211; உரமிடும் வகையில் அமைந்த, <em>எளிய வாக்கியங்கள்</em> நிறைந்தது இப்புத்தகம். ஆர் கே லக்ஷ்மன் அவர்களின் எளிமையான கோட்டோவியங்கள் கொண்டது. கூட  ஜவஹர்லால் நேருவின் முன்னுரையும்.</p>
<p>ஏப்ரல் 1964-ல் பாபுலர் ப்ரகாஷன் பதிப்பகத்தினரால் வெளியிடப் பட்டு பின் ஒரு சில பதிப்புகளே வந்து கடைசியில் தேசீயக்கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் குழுமத்தால் ( NCERT) மறுபடியும் 1981 -ல் பதிப்பிக்கப் பட்டது இது.</p>
<p>எனக்குத் தெரிந்து கன்னட மொழியில் கூட வந்துவிட்டது  இப்புத்தகம் &#8211; சில வருடங்கள் முன்; ஆனால் நம் தமிழில் இதுவரை வரவில்லை.</p>
<p>ஆனால், என்னைப் பொறுத்தவரை &#8211; மிக எளிமையாக எழுதப் பட்டதாக இருந்தாலும், இது காந்தியைப் பற்றி எழுதப் பட்ட புத்தகங்களில் மிக முக்கியமானது. அனைத்து இந்திய மொழிகளிலும் கொணரப் பட வேண்டியது இது.</p>
<p>ஆகவே, இப்புத்தகத்திற்கு நான் நம் தமிழில் ஒரு <strong><em>பெயர்ப்பைப்</em></strong> பண்ணலாம் என இருக்கிறேன்; நேரம் கிடைக்கும்போது 2-3 நாட்களுக்கு ஒரு முறை, இப்புத்தகத்தின் ஒரு அத்தியாயம் இங்கு பதிக்கப் படும்.</p>
<p>(கவனிக்கவும், இது ஒரு சுத்த மொழி பெயர்ப்பு அல்ல; என் முக்கிய உந்துதல், &#8220;பஹுரூபி காந்தி&#8221; யின் இலக்கண இலக்கிய சன்மார்க்க சத்திய சுத்தமான உருவாக்கம் அல்ல.  மாறாக &#8211; &#8216;தேசப் பிதா,&#8217; &#8216;அண்ணல்,&#8217; &#8216;அஹிம்சாவாதி,&#8217; சத்யாக்ரஹி,&#8217; &#8216;இந்தியப் பண்பாட்டை மீட்டெடுத்தவர்&#8217;  போன்ற  பரிமாணங்களுக்கப்பால், மிக <em>மிக</em> அப்பால், அவர் தம் ஆளுமைகளை, கர்ம-ஞான யோகதரிசனத்தை, <strong><em>முழு</em></strong> மனிதராக உலாவியதை,  சிறிய கோடிட்டுக் காட்டுவது தான்)</p>
<p><a href="http://othisaivu.wordpress.com/page-4/">காந்தியாயணம்…</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/othisaivu.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/othisaivu.wordpress.com/833/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/othisaivu.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/othisaivu.wordpress.com/833/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/othisaivu.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/othisaivu.wordpress.com/833/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/othisaivu.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/othisaivu.wordpress.com/833/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/othisaivu.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/othisaivu.wordpress.com/833/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/othisaivu.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/othisaivu.wordpress.com/833/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/othisaivu.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/othisaivu.wordpress.com/833/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=833&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://othisaivu.wordpress.com/2012/01/01/post-90/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b62814c6b255ed12bc7368885f18a79a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">ramasami</media:title>
		</media:content>

		<media:content url="http://othisaivu.files.wordpress.com/2011/12/bahuroopi.jpg" medium="image">
			<media:title type="html">bahuroopi</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-2)</title>
		<link>http://othisaivu.wordpress.com/2011/12/30/post-89/</link>
		<comments>http://othisaivu.wordpress.com/2011/12/30/post-89/#comments</comments>
		<pubDate>Fri, 30 Dec 2011 09:58:36 +0000</pubDate>
		<dc:creator>ramasami</dc:creator>
				<category><![CDATA[ஆஹா!]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[காந்தியாயணம்]]></category>
		<category><![CDATA[தமிழர் பண்பாடு]]></category>
		<category><![CDATA[யாம் பெற்ற பேறு....]]></category>

		<guid isPermaLink="false">http://othisaivu.wordpress.com/?p=831</guid>
		<description><![CDATA[இது இவ்வரிசையில் கடைசி பதிவு. (அப்பாடா!) நீங்கள் இதற்கு முந்தைய இரு பதிவுகளைப் படித்தால் இப்பதிவு புரியக் கூடும்&#8230; காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-1) காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… &#8230; இந்த இரு பிரிவுகள் 1 ) சிந்திக்கும் திறனற்ற வெள்ளைக்கார  மனம் கொண்ட படித்த  மௌடீகர்கள் 2 ) சிந்திக்கும் திறனற்ற படிக்காத கிணற்றுத் தவளைகள்&#8230; இவை தவிர பெரும்பாலோர் மூன்றாம் பிரிவினர் &#8211; இந்த, மிகுந்த, மிக்க பெரும் பெரும்பான்மையான மற்றவர்களுக்கு &#8211; எந்த [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=831&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>இது இவ்வரிசையில் கடைசி பதிவு. (அப்பாடா!)</p>
<p>நீங்கள் இதற்கு முந்தைய இரு பதிவுகளைப் படித்தால் <em>இப்பதிவு</em> புரியக் கூடும்&#8230;</p>
<ul>
<li><a title="காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-1)" href="http://othisaivu.wordpress.com/2011/12/26/post-88/">காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-1)</a></li>
<li><a title="காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்…" href="http://othisaivu.wordpress.com/2011/12/25/post-87/">காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்…</a></li>
</ul>
<p>&#8230; இந்த இரு பிரிவுகள் 1 ) சிந்திக்கும் திறனற்ற வெள்ளைக்கார  மனம் கொண்ட படித்த  மௌடீகர்கள் 2 ) சிந்திக்கும் திறனற்ற படிக்காத கிணற்றுத் தவளைகள்&#8230;</p>
<p>இவை தவிர பெரும்பாலோர் மூன்றாம் பிரிவினர் &#8211; இந்த, மிகுந்த, மிக்க பெரும் பெரும்பான்மையான மற்றவர்களுக்கு &#8211; எந்த விஷயத்தில் அசிரத்தையும், சோம்பேறித் தனமும்&#8230; இவர்களைப் பெருமளவும் <em>மந்தை</em> மனப்பான்மை கொண்டவர் எனச் சொல்லலாமோ?</p>
<p>சில சமயங்கள் யோசிக்கிறேன் &#8211; இம்மூன்று பிரிவுகள் தானா உள்ளன, இருந்தன நம் நாட்டில்? இந்த, அடுத்த தலைமுறைகளில் தமிழகத்து / இந்திய அதிகார மையங்களில், காவல்-நீதித்  தளங்களில், கல்வியறிவூட்டுதலில், நெறிப் படுத்தல்களில், அரசியல் தளங்களில், தொழில்முனைவோர்களில், விவசாயிகளில்,  கலை-இலக்கியம்-தத்துவம் சார்ந்து பணியாற்றியவர்களில், பணியாற்றுவோர்களில் நேர்மையாளர்களுக்கு, தகுதி வாய்ந்தவர்களுக்கு இடமே இருந்ததில்லையா? கிடையாதா?</p>
<p>நல்லவேளை &#8211; ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் &#8211; நமக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய மனிதர்கள் இன்னமும் இருக்கின்றனர்.  மிகுந்த முனைப்போடு அவர்கள், ஆரவாரமில்லாமல் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். மிகுந்த நம்பிக்கை தரும் விஷயமல்லவா இது!</p>
<p>உண்மையிலேயே நாம் மிகவும் பாக்கியசாலிகள்.</p>
<p>ஆம். மேற்கண்ட, பெரும்பாலும் பொருட்படுத்தவேண்டாத இம்மூன்று பிரிவுகளைத் தவிர ஒரு நான்காம் பிரிவினர் ஆனால், மிக மிகக் குறைந்த அளவில் உள்ளனர், இருந்தனர்  &#8211; இவர்கள் உண்மையான அறிவு ஜீவிகள். கர்மயோகிகள். ஞான யோகிகள்.நேர்மையாளர்கள். ஆரவாரமில்லாமல் பணி புரிபவர்கள். சிரத்தை மிக்கவர்கள். தளரா முனைப்பு கொண்டவரகள். நுண்மான் நுழைபுலம் கண்டறிந்தவர்கள். இவர்களில் பலர் நமக்கு அறிமுகம் அற்றவர்களாக இருக்கலாம். நிறைய எழுதாதவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்கள், ஒவ்வொரு எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் ஒத்திசைவு உடையவர்கள்.</p>
<p>திரு தரம்பால் (வரலாற்றியலாளர்), திரு டி ஆர் நாகராஜ் (சமூக, அரசியல், இலக்கிய சார்பில் &#8211; ஆழ்ந்த அற்புதமான கருத்துகள் கொண்டவர், காந்தி-அம்பேத்கர் உரையாடலாளர், கர்நாடகத்தைச் சார்ந்தவர்), முனைவர் சி வி சேஷாத்ரி (விஞ்ஞானி, சமூகவியலாளர்), திரு சங்கர் குஹா நியோகி (சத்தீஸ்கட் மக்கள் தலைவர்), முனைவர் லக்ஷ்மி தாத்தாச்சார் (சம்ஸ்க்ரித, அறிவியல், விவசாய ஆராய்ச்சியாளர்), திரு நரேந்திரநாத் நாயுடு (மக்கள் தலைவர், காந்தியவாதி, சித்தூர், ஆந்திரம் &#8211; இவர் நம் &#8216;மோகமுள்&#8217; தி ஜானகிராமனின் மருமகனும் கூட) -  மற்றும் பலர் இம்மாதிரியினர்.</p>
<p>இவர்களை நான் பலகாலம் படித்து, பின் அறிந்து சிறிதளவு பழக நேர்ந்தது &#8211; யாம் பெற்ற <em>பேறு</em> தான்!  (இவர்களில் தாத்தாச்சார் தவிர யாரும் உயிருடன் இல்லை, இப்பொழுது)</p>
<p>இத்தலைமுறையினர்களில் &#8211; மாதிரிக்கு &#8216;முன்றில்&#8217; மகாதேவன் அவர்களை (குறைந்த பட்சம் ஒரு &#8216;உலகத் தரம்&#8217; வாய்ந்த அற்புதமான சிறுகதையை எழுதிய, நம்முடைய  மா அரங்கநாதன் அவர்களின் மகன் இவர் &#8211; அரங்கநாதன் அவர்களும் கொண்டாடப் பட வேண்டியவர் தான்! முன்றில் &#8211; ஆம். அதே &#8216;அணிலாடு முன்றில்&#8217; வழியாகப் பெயர் வைக்கப் பட்டது தான் &#8211; சற்றொப்ப 20 ஆண்டுகட்கு முன் உலா வந்த ஓர் அழகான இலக்கியச் சிறு பத்திரிக்கையும் கூட, இப்பெயரில் மாம்பலம் ரங்கநாதன் தெருவில், மகாதேவனின் ஒரு புத்தக விற்பனை நிலையம் கூட இயங்கி வந்தது) எடுத்துக் கொள்ளுங்கள்.  80களில்   90களில் இவர் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த முனைப்புடன் செயல் பட்டார். இப்போது விற்பனை வரி தொடர்பான வழக்குரைஞர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக உள்ளார் சென்னையில்; இவரால் நம் தமிழக அரசுக் கருவூலத்துக்கு வந்துள்ள வரவு குறிப்பிடத் தக்கது &#8211; இவர் போன்றோர், சான்றோர்,  நீதிபதிகளாக முடிந்தால் சென்னை உயர் நீதி மன்றம் நிச்சயம் இன்னமும் உயர்வும் பெருமையும் பெறும்.</p>
<p>இன்னொருவர் இரா சாயிநாத் அவர்கள்.  இவர் சிறு வயதில் மிகவும் கடினமான வாழ்க்கை வாழ்ந்து தன் தளரா முயற்சியாலும், விடாவுழைப்பினாலும், அறிவு கூர்மையினாலும் மிகவும் முன்னேறியவர், பண்பாளர். இப்போது லண்டனில் வாழ்ந்தது கொண்டிருக்கிறார் &#8211; பல சிறு தன்னார்வ நிறுவனங்களுக்கு பல விதங்களில் உதவி செய்து வருகிறார்; கணையாழி பத்திரிகை நடத்திய &#8216;தி ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டி&#8217;யில் 80களில் -  இவருடைய குறுநாவலும் வந்தது &#8211; தலைப்பு ஞாபகம் இல்லை.</p>
<p>இன்னும் பலர் இந்த நான்காம் வர்ணத்தில், பிரிவில் உள்ளனர். ஆனால் அவர்கள் பற்றிப் பின்னொரு காலத்தில் பார்க்கலாம்&#8230;</p>
<p><em>&lt;<span style="text-decoration:underline;">&#8230; உங்களுக்கு ஆதர்சமானவர்களை, ஆத்மார்த்தமானவர்களை,  நண்பர்களை &#8211; பெயர், குணாதிசியங்களோடு   இங்கே நிரப்பிக் கொள்ளலாம்..</span>.&gt;</em></p>
<p style="text-align:center;"><strong>=-=-=-=</strong></p>
<p>மறுபடியும், மேற்கண்ட எளிமைப் படுத்தப் பட்ட நான்கு &#8216;வர்ண&#8217;ங்களுக்கு, புள்ளியியல்ரீதியாக(!) வருவோம்.</p>
<p>நான்காம் வர்ணத்தைச் சார்ந்தவர்கள், மகத்தானவர்கள் மிகக் குறைவு.</p>
<p>மூன்றாம் வர்ணத்தவர் மந்தை சார்பினர் &#8211; நம் மக்களின் மிகப் பெரும்பான்மையினர்.</p>
<p>இரண்டாம், முதலாம் வர்ணத்தினர்  பளிச்சென்று முத்திரைகளுடன் தெரிபவர்கள், பவனி வருபவர்கள். ஒதுக்கித் தள்ளப் படவேண்டியவர்கள் என்றாலும், இவர்கள் சார்பினர் தாம் மிக அதிக அளவில் நம் சூழலில், போலி அறிவுத் தளத்தில் உள்ளனர்.</p>
<p>இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு சிறுவனுக்கு, முதிரா இளைஞனுக்கு, வாழ்க்கை அனுபவங்கள் குறைந்தவனுக்கு &#8212; ஏதோ ஒரு விதத்தில், இடதுசாரி &#8211; வலதுசாரி &#8211; பூசாரி / பிற்போக்கு &#8211; முற்போக்கு &#8211; வயிற்றுப் போக்கு / பாட்டாளி &#8211; முதலாளி &#8211; சீக்காளி / மேல் &#8211; கீழ் &#8211; நடு  / இலக்கியம் &#8211; அலக்கியம் / கவிதை &#8211; கிவிதை / &#8230; போன்ற இலகுவில் வசப் படும் படிமானங்கள், சுலபமான முத்திரை குத்தல்கள் &#8211; அவை சார்ந்த எண்ணங்கள், பல பரிமாணங்களற்ற, <em>கவைக்குதவாத   </em>தட்டையான போக்குகள் போன்றவை தான் சாஸ்வதம்.</p>
<p>இதில் சிறிது விசனத்துக்குரிய விஷயம் என்னவென்றால்- நம் இளைஞர்களில் பெரும்பாலோருக்கு இந்த நான்காம் வர்ணத்தவர் கிடைப்பது மிக மிக அதிசயம்&#8230;</p>
<p>ஆனால் இந்தப் போக்கையும் மீறி நான்காம் வர்ணத்தவரை நான் அப்போது அடைந்தது என் பாக்கியம் தான் எனச் சொல்லவேண்டும்.</p>
<p style="text-align:center;">=-=-=-=</p>
<p>இப்போது நாம் முதலாம் வர்ணத்திற்கு &#8211; எப்படி நான் போய்ச் சேர்ந்தேன் என்பதை நோக்கி மறுபடியும் வருவோம்:</p>
<p>&#8230; சோவியத் யூனியன், சீனா பதிப்பித்த பல்வேறு புத்தகங்களும் &#8211; பொதுவாக, இவை பொது உடைமை பற்றியவை &#8211; என்னில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. மாக்சிம் கார்கி-யின் தாய், ஜூலிஸ் புசிக்-கின் &#8216;தூக்கு மேடைக் குறிப்புக்கள்&#8217; போன்ற புத்தகங்கள்,  மேலும் &#8211; ராகுல் சாங்க்ருத்யாயன், ஷிப்தாஸ் கோஷ், சாரு மசூம்தார், கோசம்பி, கோவிந்தன் (கடைசி இருவரை இன்னமும் நான் மதிக்கிறேன்) போன்றவர்களின் பெரும்பாலும் எளிமைப் படுத்தப் பட்ட, வசீகரக்  கருத்தாக்கங்கள்,  இந்தியப் பாரம்பரியத்தை மிகவும் சாராத போக்குகள் -  என் மனதை, கற்பனையைக் கவர்ந்திருந்தன..</p>
<p>ஆனால், நல்ல வேளையாக 19 வயது வாக்கில், திராவிட மாயையிலிருந்து, பிரிவினைக் கோட்பாடுகளில் இருந்து &#8211; ஏற்கெனவே விடுபட்டிருந்தேன். பின்னோக்கி யோசித்துப் பார்த்தால், எனக்கு இது கொஞ்சம் சுலபமாக இருந்திருக்கிறது. எந்த சுய சிந்தனையுள்ள மனிதனும் &#8211; அவனிடம் (அல்லது அவளிடம்) அடிப்படை நேர்மையிருந்தால்,  இதில் இருந்து மீள்வது எளிது.</p>
<p>ஏனெனில், இம்மாயை, திராவிட <em>மாயை</em> &#8211; பொய்களினால், காலி அட்டைப் பெட்டிகளினால் அடிப்படைக் கட்டுமானம் செய்யப் பட்டது.</p>
<p style="text-align:center;"><strong>=-=-=-=</strong></p>
<p>ஆனால், சுமார் 25 வயது வாக்கில்தான் &#8216;பொதுவுடைமை&#8217; (கம்யூனிசம், மார்க்சியம்) மாயையிலிருந்தும் என்னால் விடுபட முடிந்தது. ஏனெனில்  &#8216;பொதுவுடைமை&#8217; என்பது ஒரு <em>மாயக் கண்ணாடி</em> &#8211; இப்படித்தான் வாழ்க்கை, இதுதான் புரட்சி, இப்படித் தான் அதனை வென்றெடுக்க வேண்டும் என்று ஒரு சுலபமான வாழ்க்கைப் பாதையைக் காண்பிக்கிறது, இது.</p>
<p>மனிதர்களை விட்டு, மனித நேயத்தை விட்டு &#8211; என்னவோ means of production, relations of production என்று அறிவியல் பூர்வமாகச் சிந்திப்பதாக பாவனை செய்வது &#8211; ஆனால் நடைமுறையில் தாங்கொண்ணா வன்முறை தான் இதற்குத் தெரியும். கருத்தியல் சார்ந்த வன்முறைகளைக் கூட (&#8216;பேச்சில் பலாத்காரம், கருத்துலகக் கோழைகளின் கடைசி ஆயுதம்&#8217;) நாம் ஓரளவாவது நாம் ஒப்புக் கொள்ளலாம் &#8211; ஆனால் நம் மக்களை - நம் கருத்துடன் ஒத்துப் போகாதவர்களை  &#8211; அழித்தொழிப்பது, புரட்சிக்கு ஒரு வழி  அல்ல என்பது சில காலமாவது இயக்கங்களுடன் பரிச்சயம் இருந்தால் தான் தெளிவு படும்.</p>
<p>ஒரு விஷயத்தையும் தெளிவு படுத்த வேண்டும்: கோழைத்தனமான வன்முறை  தவிர்த்த &#8211; மனிதாபிமானமிக்க் மார்க்சியத்துக்கு (&#8216;இந்தியம்&#8217; படுத்தப் பட்ட மார்க்சியம் என்று இதனைச் சொல்லலாமோ என்னவோ!) தங்களை அர்ப்பணிப்பு செய்த நேர்மையாளர்களும் தமிழ் சூழலில் இருந்தனர், இருக்கின்றனர் &#8211; என்  மதிப்புக்குரிய  &#8216;நிகழ்&#8217; ஞானி போல, எஸ் என் நாகராஜன் போல. ஆனால் அவர்களைப் பற்றி நான் பேசவில்லை.</p>
<p>இங்கும் நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும்: நான் தமிழகத்துப் புரட்சிக் கனல்களுடன் அபரிமிதமாகப் பழகியவன் அல்லன். ஆனால் கேடயம், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், மனஓசை போன்ற பத்திரிகைகள் மூலமும், இவர்களுடைய &#8216;கட்சித் திட்டங்கள்&#8217; மூலமும் இவர்களை அறிய முயன்றேன்; சில காரணங்களால், சிலரை நேரடியாக அறிந்திருந்தேன் &#8211; அவ்வளவே!</p>
<p>அதில் ஒருவர் 1980-களில் &#8216;ராஜீவ் காந்தியைக் கொல்லுவோம்&#8217; என்று பாண்டிச்சேரியில் வீராவேச சுவரொட்டி ஒட்டி, பின்னர் காவல் துறையினரால் பிடிக்கப் பட்ட பிறகு குய்யோ முறையோ என்று அழுது, பின் &#8216;நான் பிள்ளைக் குட்டிக்காரன்&#8217; என்று பிலாக்கணம் வைத்து, நான் ஒரு &#8216;பொதுவுடைமை செய்யப்பட்ட வங்கியில் பணி புரிபவன்&#8217; என்று தனது &#8216;மரியாதைக்குரிய&#8217; தகுதிகளை முன் வைத்து  &#8211; பின், சில  INTUC தோழர்களால் மனிதாபிமானம் கருதி விடுவிக்கப் பட்டது ஒரு நகைச்சுவை. ஆனால் இம்மாதிரி ஆட்களின் பின்னாலும் தோழர் தோழர் என்று சில வெள்ளந்தி இளைஞர்களும் அலைந்து கொண்டிருந்தனர். தீவிர இடதுசாரி இளைஞர்கள் படிப்பறிவு, யோசிக்கும் முனைப்பு, செயல் திறம் உடையவர்கள் என்று நான் அதுகாறும் நம்பி வந்தது எவ்வளவு முட்டாள் தனம் என்பதை நான் அப்போது தான் அறிந்தேன்.</p>
<p>இந்த இயக்கங்கள் சார்ந்த சிலர் நேர்மையானவர்களாக இருந்திருக்கலாம். தைரியமானவர்களாக இருந்திருக்கவும் கூடும். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் மிகப் பலர் மிக சொகுசான அரசுப் பணிகளில் இருந்துகொண்டு &#8211; அரசு வன்முறை, தரகு முதலாளித்துவம், பூர்ஷ்வா என்று வெட்டிப் பேச்சு, <em>புரட்சிகரக் கோழைத்தனம்</em> பேசுபவர்கள் தான்.</p>
<p style="text-align:center;"><strong>=-=-=-=-=</strong></p>
<p>அப்போது, நடு 1980-களில் என்பதாக ஞாபகம் &#8211; மத்திய இந்தியாவின் <em>மா-லே கண்ணர்</em>களுடன் தான் என்னுடைய தொடர்புகள் இருந்தன &#8211; அக்காலத்தை நினைக்கும்போது &#8211; அப்போது தமிழகத்தில் இருந்த சுமார் சில நூறுகளில் இருந்த புரட்சிப் புயல் மா-லே க்களில் &#8211; மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி, மக்கள் யுத்தம் என ஆயிரமாயிரம்  பிரிவுகள், ஒருவருக்கொருவர் வசவுகள், புலம்பல்கள், புரட்சிகர புழுதி வாரி இரைத்தல்கள் !</p>
<p>சுமார் பத்து வருடங்கட்குள் &#8211; பல விதமான, நிறமான அனுபவங்கள் &#8211; சேவைகள், அர்ப்பணிப்புகள், துரோகங்கள், அடி-உதைகள், பொச்சரிப்புக்கள், குடுமிப் பிடிச் சண்டைகள், அபாண்டங்கள், கொலைகள் &#8211; சம்பந்தப் பட்ட பல விஷயங்கள்&#8230; நிற்க,  கொலைகளை நான் செய்யவில்லை &#8211; ஆனால் இவை இயக்கக் கோழைத்தோழர்கள், மற்றத் தோழர்களுக்குச் செய்தவை அல்லது &#8216;வர்க்க எதிரி&#8217;களுக்குச் செய்தவை.</p>
<p>எனக்கு நினைவு இருக்கும்படி &#8211; அக்காலத்தில் தண்டகாரண்ய பிரிவுகள் இப்படி வெட்டி வீரம் சார்ந்தவையாக இருந்திருக்க வில்லை. ஆனால் சொல்லொண்ணா வன்முறையில் திளைத்திருந்தவை தான் அவை என்பதில் சந்தேகமே இல்லை.</p>
<p>கனவுகள் பகற்கனவுகளானது, அவர்களை சரியான பின்னணியில் புரிந்து கொள்ள முனைந்தது  என்னுடைய பரிணாம வளர்ச்சி என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல&#8230;.</p>
<p style="text-align:center;"><strong>=-=-=-=-=</strong></p>
<p>எது எப்படியோ &#8211; சுமார் 25 வயது வாக்கில், 1988-90ல் முழித்துக் கொண்டு,  மலங்க மலங்க நான் விழித்துக் கொண்டதற்கு &#8211; மிகப் பல காரணங்கள்  -  திராவிடத் தலைவர்கள் பால் மிகுந்த சோர்வு கலந்த அருவருப்பு ஏற்பட்டதும், மார்க்சிய-லெனினிய இயக்கங்களை பெரும்பாலும் வெறும் பொறுக்கித்தனம் / வன்முறை சார்  குழுக்களாக நான் பார்க்க ஆரம்பித்ததும்  &#8211; மிக முக்கியமாக, படிப்பு (பொருளாதார, சமூகமானுடவியல், வரலாறு, அரசியல்  சார்ந்தவை), வாழ்க்கை அனுபவ தளங்கள் விரிந்ததும் காரணங்கள். போற்றத்தக்க தரம்பால் அவர்களிடம் சிறிது கூடப் பழக முடிந்ததும் என் பாக்கியம். ஜோசப் கொர்நீலியஸ் குமரப்பாவும், வென்டெல் பெர்ரியும். ஜோசப் கேம்ப்பெல்லும்  கூட மிகுந்த உதவி செய்தனர்&#8230; எண்ணிறந்த எழுத்தாளர்களுக்கு, நபர்களுக்கு,  நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்..</p>
<p>காந்தி தொடர்பான பயணங்கள், க்ஷேத்திராடனங்கள், படிப்பு, தொழில், தோட்டம் என்று சில சுற்றுக்கள் சுற்றியிருக்கிறேன். பல விஷயங்கள் செய்ய முயன்றிருக்கிறேன்&#8230; சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை என்றாலும்&#8230;</p>
<p>பின் காந்தியின் கோட்பாடுகளின் ஒன்றான தர்மகர்த்தா முறையில் (trusteeship) &#8211; சில காலத்திற்கேற்ற மாற்றங்கள்(!) செய்து சில சிறு தொழிற்சாலைகளை நிறுவினேன்  &#8211; சில நண்பர்களுடன் (பாவம், அவர்கள்!) சேர்ந்து கொண்டு. இதில் மிகச்சில சிறு வெற்றிகள் &#8211; பல பெரும் தோல்விகள். அவமானங்கள். ஆனால் மிகப் பல படிப்பினைகள்.</p>
<p>எப்படியோ, நல்லபடியாகவே வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.</p>
<p>ஆனால், இப்போதும்  என் பார்வைகள், நோக்கங்கள் மிகவும் விரிந்து விட்டவை என நான் சொல்லவில்லை &#8211; பொய்களின் கட்டுமானங்களில் இருந்து உண்மையை நோக்கிச் செல்ல முயல்கிறேன் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாமோ என்னவோ&#8230;</p>
<p style="text-align:center;">=-=-=-=</p>
<p>எது எப்படியோ &#8211; கருணாநிதி போன்ற உதிரி நகைச்சுவைகளைப் பற்றி மட்டும் எவ்வளவு நாள் எழுதிக் கொண்டே இருப்பது?</p>
<p>எவ்வளவோ <em>அற்புதங்கள்</em> கொட்டிக் கிடக்கின்றன அன்றோ&#8230;</p>
<p>ஆக, நேரம் கிடைக்கும் போது நான், என் அறிவுக்கு எட்டிய வகையில், நம் காந்தி பற்றி மற்ற விஷயங்களைப் பற்றியும் எழுதலாம் என நினைக்கிறேன். இவற்றில் பெரும்பாலானவை மொழி பெயர்ப்புகளாகவே இருக்கும் என நினைக்கிறேன்&#8230;</p>
<p><a href="http://othisaivu.wordpress.com/page-4/">காந்தியாயணம்…</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/othisaivu.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/othisaivu.wordpress.com/831/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/othisaivu.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/othisaivu.wordpress.com/831/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/othisaivu.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/othisaivu.wordpress.com/831/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/othisaivu.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/othisaivu.wordpress.com/831/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/othisaivu.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/othisaivu.wordpress.com/831/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/othisaivu.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/othisaivu.wordpress.com/831/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/othisaivu.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/othisaivu.wordpress.com/831/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=831&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://othisaivu.wordpress.com/2011/12/30/post-89/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b62814c6b255ed12bc7368885f18a79a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">ramasami</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்&#8230; (தொடர்ச்சி-1)</title>
		<link>http://othisaivu.wordpress.com/2011/12/26/post-88/</link>
		<comments>http://othisaivu.wordpress.com/2011/12/26/post-88/#comments</comments>
		<pubDate>Mon, 26 Dec 2011 19:00:12 +0000</pubDate>
		<dc:creator>ramasami</dc:creator>
				<category><![CDATA[ஆஹா!]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[காந்தியாயணம்]]></category>
		<category><![CDATA[தமிழர் பண்பாடு]]></category>
		<category><![CDATA[யாம் பெற்ற பேறு....]]></category>

		<guid isPermaLink="false">http://othisaivu.wordpress.com/?p=822</guid>
		<description><![CDATA[ஏன் இப்படியானது என யோசிக்கிறேன்…  (திடுக்கிடும் தொடர்வதை தொடரகிறது&#8230;) சிறிது அசை போட்டுப் பார்த்தால் &#8211; அக்காலத்திலும் இக்காலத்திலும் &#8211; மிகப் பல இளைஞர்கள் &#8211; பல தரப் பட்ட விசிலடிச்சான் குஞ்சுகளாகவே  (குறிப்பிட்ட தத்துவங்களுக்கும், நிலைப்பாடுகளுக்கும், அரசியல்-சமூகக் குறியீடுகளுக்கும்) நிலைத்து விடுவது ஒரு சாதாரணமான, வாடிக்கையான விஷயமே&#8230; இதில் விசனத்துக்குரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் இம்முதிரா இளமை உணர்ச்சிக் குவியல்களுக்குள் இருந்து மீண்டு வெளிவர, விடுபட முடிவதே இல்லை&#8230; ஏனெனில், படிப்பறிவு மட்டும் போதாது &#8211; [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=822&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://othisaivu.wordpress.com/2011/12/25/post-87/">ஏன் இப்படியானது </a>என யோசிக்கிறேன்…  (திடுக்கிடும் தொடர்<em>வதை</em> தொடரகிறது&#8230;)</p>
<p>சிறிது அசை போட்டுப் பார்த்தால் &#8211; அக்காலத்திலும் இக்காலத்திலும் &#8211; மிகப் பல இளைஞர்கள் &#8211; பல தரப் பட்ட விசிலடிச்சான் குஞ்சுகளாகவே  (குறிப்பிட்ட தத்துவங்களுக்கும், நிலைப்பாடுகளுக்கும், அரசியல்-சமூகக் குறியீடுகளுக்கும்) நிலைத்து விடுவது ஒரு சாதாரணமான, வாடிக்கையான விஷயமே&#8230; இதில் விசனத்துக்குரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் இம்முதிரா இளமை உணர்ச்சிக் குவியல்களுக்குள் இருந்து மீண்டு வெளிவர, விடுபட முடிவதே இல்லை&#8230;</p>
<p>ஏனெனில், படிப்பறிவு மட்டும் போதாது &#8211; நிறைந்த, பலவகைப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் வேண்டும் நம் இளைஞர்களுக்கு.</p>
<p>பளிச்சிடும் நேர்மையுள்ள பண்பட்டவர்களின், புடம் போடப் பட்டவர்களின், அதாவது <strong>குரு</strong>க்களின் சகவாசம் வேண்டும், அவர்களை மேன்மேலும் மெருகேற்ற, அந்த குருக்கள் <strong>ஞானி</strong>களாக இருக்க வேண்டும்,</p>
<p>அவ்விளைஞர்களுக்கு நுண்மான் நுழைபுலம் அறியும் &#8211; பண்பட்ட அறிவும், சாதனையும் வேண்டும். ஆத்மார்த்தமான, நேர்மையான, அனுபவபூர்வமான சிந்தனைகளை <em>மெய் வருத்தக் கூலி</em>யாக மட்டுமே  பெற்றுக் கொள்ளும் மனோ திடம் வேண்டும். தோல்வி கண்டு துவளாத திரும்பி எழும் (சுந்தர ராமசாமியின்<a href="http://othisaivu.wordpress.com/2011/05/14/post-30/"> சவால்</a>  கவிதை போல) மனப்பான்மையும் கற்றுக் கொள்ளப் பட வேண்டும். சுய பச்சாத்தாபம் அற்ற சுய பரிசோதனை மூலம் தங்கள் ஆன்மாவை மீட்டெடுக்க முடியவேண்டும்&#8230;</p>
<p>இப்படிப்பட்ட சூழல் ஒரு <em>தமிழ் </em> இளைஞனுக்கு அரிதாகவே கிடைப்பது நம் பழ வினைப் பயன் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல&#8230;</p>
<p style="text-align:center;"><strong>=-=-=-=</strong></p>
<p>வெட்கக் கேடான இத்தேக்கத்துக்கு, இம்மனப்பான்மைக்கு, இப்போக்குக்கு  &#8211; என்னைப் பொறுத்தவரை &#8211; ஒரு முக்கிய காரணம்: எங்களுடைய வட்டார தமிழ் நூல் நிலையங்களிலும், மெத்தப் &#8216;படித்த&#8217; பெரியவர்களிடமும் ஒரு தலைப் பட்சமான, நம் பண்பாட்டை நினைத்தாலே வெட்கித் தலை குனிய வேண்டிய, குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டிய புத்தகங்களும், கருத்துகளும், எண்ணக் குவியல்களும் தான் இருந்தன.</p>
<p>அவர்களுக்கு இந்தியா &#8216;தேசிய இனங்களின் சிறைக் கூடம்&#8217; &#8211; காந்தி ஒரு <em>காந்தியார்</em> &#8211; புரட்சி இதோ வந்து கொண்டிருக்கிறது &#8211; அட, இதோ <em>வந்தே</em> விட்டது -  நம் பாரம்பரியம் ஒரு கவைக்குதவாத ஒன்று &#8211; இந்து மதம் குப்பை &#8211; &#8216;மதச்சார்பின்மை&#8217; தான் கடவுள் &#8211; வெள்ளைக்காரன் (அவன் மார்க்ஸ் ஆக இருக்கலாம், க்ராம்ஷியாக இருக்கலாம், ஏன்,  அவர்கள்  நம்முடைய &#8211; எம் என்  ராய்-ஆகவோ தர்மா தத் கோசம்பியாகவோ கூட இருக்கலாம். ரோமிளா தாபராகக் கூட இருக்கலாம். அவர்கள் தான் &#8216;வசிஷ்டர்கள்&#8217; அவர்கள் வாயால் புகழப் பட்டால் சொர்க்கம் கிடைத்தது போல் &#8211; அவர்கள் இகழ்ந்தால், அப்படி இகழப்பட்டதற்கு அது <em>நிச்சயம் </em> வேண்டியதே) என்ன உளறினாலும் அவர்கள்  சொல்வது எல்லாம் சரி, அவர்கள் தான் &#8216;அறிவியல்&#8217; பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் சிந்திக்கக் கூடியவர்கள்.</p>
<p>ஆக, அவர்களோ பரிணாம வளர்ச்சியின் உச்சாணிக் கொம்பிலிருந்து நமக்கு வெவ்வெவ்வே என்று அனைத்துப் பரிமாணங்களிலும் &#8216;அழகு&#8217; காட்டிக் கொண்டிருக்கின்றனர். நாமோ &#8211; அறியாமையிலும், பல கோடி கடவுட்களைப் பிடித்துக் கொண்டும், மோட்சத்தை விரும்பிக் கொண்டும், ஜாதிகளை மாட்டிக் கொண்டும்,  கீழ்மை நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக  உழல்பவர்கள். நாம் &#8216;கஞ்சி குடிப்பதற்கிலர், அதன் காரணமும் அறிகிலர்.&#8217;   நாம் அடிப்படையில் முட்டாள்கள். ஆகவே நமக்கு வெள்ளைக்கார, மேலை நாட்டு ஞானமும் அவர்களின், அவர்கள் சார்ந்த  உள்நாட்டு மேட்டிமைவாதிகளின் உதவியும் மிக முக்கியம். இவை மட்டுமே முக்கியம்&#8230;</p>
<p>&#8230; இன்ன பிற இப்படிப்பட்ட மனப் பிரமைகள், பிறழ்வுகள் நமக்கு&#8230;</p>
<p>வெள்ளைக்காரன் நமக்குச் சொல்வதை, சொல்ல நினைப்பதை, சொல்லக் கூடுவதை, நம்மூர் அசல் அக்மார்க் தேங்காய்க் கொட்டைகள் (இவர்கள் வெளியே தோல் நிறம் நம்மைப் போல பழுப்பாக, கருப்பாக அழகாக இருந்தாலும், உள்ளே அழுக்கான வெள்ளை எண்ணங்கள் தான்) அவற்றை வழிமொழிந்து நமக்கு மேலும் கோனார் உரை எழுதுவது &#8211; நம்முடைய &#8216;தி இந்து&#8217; தினசரியிலிருந்து கலைஞர் டிவி வரை, இன்று வரை, தொடர்கிறது&#8230; இந்த போக்கு, பல தளங்களில் நிலவுகிறது &#8211; இலக்கியமானாலும் சரி அறிவியலானாலும் சரி. (இந்நிலையில் சில குறிப்பிடத்தக்க விதிவிலககுகள் இருந்தன அன்று &#8211; இருக்கின்றன இன்று என்பது சந்தோஷம் தரக் கூடிய விஷயம்.)</p>
<p style="text-align:center;">=-=-=-=</p>
<p>&#8230; இந்த வெள்ளைக்கார இளக்கார மனம்  சார்ந்து இயங்கும் அட்டை மனிதர்களூடே, தேங்காய்க் கொட்டைகளினூடே     ஒரு இளம் மனம் இயங்கினால் அதற்கு <a href="http://www.vinavu.com/" target="_blank">வினவு  போன்ற இத்தியாதிகள்</a> தவிர விடிமோட்சமே இல்லை.</p>
<p>புரட்சிகரமான கரமைதுனம் தான் அவன் வாழ்நாளில் அடையக் கூடிய உச்ச கட்ட <del>வி</del>உந்து சக்தி.  (ஆனால்,  சிறிது யோசித்தால், கரமைதுனம் நம் வாழ்வில், இயல்பில், இனக்கவர்ச்சி-உளவியலில், நமது உந்துதல்களில்  ஒரு அங்கம் தான், அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது தான்&#8230; ஆனால், <em>புரட்சி</em> அப்படியல்ல)</p>
<p>மிஞ்சி மிஞ்சிப் போனால் அவன் திரிபுவாதி / எதிர்ப்புரட்சியாளன் / வர்க்கஎதிரி / போலீஸ் நாய் / இன எதிரி / காடை / குள்ளநரி / சதிகாரன் / இயக்கத் துரோகி  என்று ஏதாவது சொல்லி, பொய்மை பரப்பி -  தன் சுயநல வாயில் நுரை தள்ள  மற்றவர்களைக்  கொல்லலாம் (கிஷேன்ஜி, &#8216;புலி&#8217; பிரபாகரன் போல). மற்றவர்களால் கொல்லப் படலாம் (கிஷேன்ஜி,  &#8216;புலி&#8217; பிரபாகரன் போல).</p>
<p>பின்னதில் நாம் அவர்கள் &#8216;வீர மரணம்&#8217; அடைந்தனர் என்று சந்தோஷப் படலாம். நம் புல்லரிப்புகளுக்கும், புரட்சிகர முதுகு சொரிதல்களுக்கும், அதன் லாகிரிக்கும் கேட்பானேன்?</p>
<p style="text-align:center;"><strong>=-=-=-=-=</strong></p>
<p>நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்&#8230;</p>
<p>எது எப்படியோ&#8230;  பிற்காலத்தில் தான் தெரிய வந்தது &#8211; மேற்கண்டவர்கள் தான் (மக்காலே முதல் துப்வா ஈறாக &#8211;  <a href="http://othisaivu.wordpress.com/2011/12/25/post-87/">முந்தைய இடுகை</a>யைப் பார்க்கவும்) இந்த &#8216;திராவிட மாயையை&#8217; உருவாக்கம் செய்தவர்கள் என்பது. இவர்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய தேவை &#8211; பிரித்தாளும் சூழ்ச்சியும், மத மாற்றமும், பொருளாதாரச் சுருட்டலும்  -  மிகமிக முக்கியமாக &#8211; கலாச்சார, ஆன்மிகச் சுரண்டலும் தான் &#8212; என்பதும் கூட!</p>
<p>மார்க்ஸ், மார்க்சீயம் &#8211; அதன் நவீனச் சிந்தனைகள் பற்றி மேலும் படித்து, சிலபல தோழர்களுடன் உழன்ற பின் தான், சிலபல போராட்டங்கள், எழுச்சிகள்-வீழ்ச்சிகள், வலிகள், பொய்மைகள் கண்ட பின் தான் &#8211; மார்க்சீயத்தில் மெய்ஞானத்துக்கு, சமரசத்துக்கு, அன்புக்கு &#8211;  முக்கியமாக, சுத்த சோஷலிச சன்மார்க்க சத்திய  முன்னேற்றத்துக்கு -  இடமில்லை என்பதும் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்&#8230; (ஆனால் என் பெருமதிப்புக்குரிய சிலர் இன்னமும் &#8216;இயக்கங்களில்,&#8217;  இயக்கங்களுக்கு வெளியில் இருக்கின்றனர்; அவர்கள் என் இன்னமும் அங்கே இருக்கிறார்கள் என்பதையும், நான் புரிந்து கொள்ள முடிகிறது)</p>
<p style="text-align:center;"><strong>=-=-=-=</strong></p>
<p>அக்காலத்தில் மற்றும் சிலர் இருந்தார்கள், இப்பொழுதும் இருக்கிறார்கள்  &#8211; ஆனால் அவர்கள் மற்றோர் எல்லையில் -  பொறுக்க முடியாத மௌடீகத்தில் &#8211; ஆழ்ந்து இருந்தனர் / இருக்கிறார்கள். இவர்களுடையது உப்பு சப்பில்லாத வைதீகம் என சொல்லலாமா? அல்லது வறட்டு வேதாந்தம் என்று சொல்லலாமா? (வைதீகமும் வேதாந்தமும் மிக முக்கியமானவை ஆனால் சரியாகப் புரிந்துகொள்ளப் படாதவை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் &#8211; நான் இங்கு சொல்லவந்தது பொதுவான, சப்பிய மாங்கொட்டை போன்ற சொல்லாடல்கள் பற்றி)</p>
<p>&#8216;அகில புவனத்துக்கும் தாய் மொழி சம்ஸ்கிருதம் &#8216;  அல்லது &#8216;ஜெர்மன் காரன் ராக்கெட் ரகசியத்தை இந்தியாவிலிருந்து தான் திருடினான்&#8217; அல்லது &#8216;லெமுரியாதான் முதல் கண்டம். உலகின் முதல் மொழி தமிழ் தான்&#8217;  அல்லது &#8216;நடிகர் திலகம்  /  புர்ச்சித் தலைவர் / ரஜினி  / கமல் / &#8230;. / &#8230;. போல நடிப்பவர் உலகத்தில் யார் உளர்&#8217;  அல்லது &#8216;முதல் குரங்கு திராவிடக் குரங்கு&#8217;  அல்லது &#8216;வால்ட் விட்மனும் பாரதிதாசனும்,&#8217; அல்லது &#8216;சங்க இலக்கியத்தில் கணினிசார் குழுஊக்குறி&#8217; &#8211; போன்ற கவைக்குதவாத தவறான,  நகைச்சுவைச் செய்திகள் தான் இவர்கள் வாழ்க்கையில் உச்சகட்டப் புல்லரிப்பு.</p>
<p>இவர்களில் - இந்த இரண்டாம் வகையின் பெரும்பாலோருக்கு -  &#8216;வெள்ளைக்காரப் படிப்பறிவு&#8217; குறைவு; உலக ஞானமும் பெற வாய்ப்புகள் குறைவு..  அரவிந்தனின் <a href="http://www.imdb.com/title/tt0082318/" target="_blank">எலிப்பத்தாயம்</a> (எலிப்பொறி) கதாநாயகன் போல &#8211; இவர்களுக்கும் விடிவே இல்லை.</p>
<p style="text-align:right;">(தொடரும்&#8230; )</p>
<p><a href="../page-4/">காந்தியாயணம்…</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/othisaivu.wordpress.com/822/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/othisaivu.wordpress.com/822/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/othisaivu.wordpress.com/822/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/othisaivu.wordpress.com/822/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/othisaivu.wordpress.com/822/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/othisaivu.wordpress.com/822/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/othisaivu.wordpress.com/822/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/othisaivu.wordpress.com/822/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/othisaivu.wordpress.com/822/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/othisaivu.wordpress.com/822/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/othisaivu.wordpress.com/822/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/othisaivu.wordpress.com/822/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/othisaivu.wordpress.com/822/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/othisaivu.wordpress.com/822/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=822&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://othisaivu.wordpress.com/2011/12/26/post-88/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b62814c6b255ed12bc7368885f18a79a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">ramasami</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்&#8230;</title>
		<link>http://othisaivu.wordpress.com/2011/12/25/post-87/</link>
		<comments>http://othisaivu.wordpress.com/2011/12/25/post-87/#comments</comments>
		<pubDate>Sun, 25 Dec 2011 16:04:16 +0000</pubDate>
		<dc:creator>ramasami</dc:creator>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[காந்தியாயணம்]]></category>
		<category><![CDATA[தமிழர் பண்பாடு]]></category>
		<category><![CDATA[யாம் பெற்ற பேறு....]]></category>

		<guid isPermaLink="false">http://othisaivu.wordpress.com/?p=802</guid>
		<description><![CDATA[மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களைப் பற்றி &#8211; அவரின் ஞான, கர்ம, பக்திக் கீற்றுகளை ஓரளவாகவாவது புரிந்து கொள்ள முயற்சி செய்வது, அவருடைய பல் வேறு விதமான ஆச்சரியப்பட வைக்கும் ஆளுமைகளை அவதானிப்பது, அவரால் எப்படி மிகப் பல விஷயங்களைச் செய்ய முடிந்தது &#8211; தன்னலம் கருதா தூய அறம் சார்ந்து &#8211; ஆன்மாவிலிருந்து அறிவியல் ஊடாக அஹிம்சை வழியில் அரசியலை நோக்கி, ஒவ்வொரு விஷயத்திலும் &#8211; அது உணவானாலும் சரி, நுண்நோக்கியானாலும் சரி, விரதமானாலும் சரி, [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=802&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களைப் பற்றி &#8211; அவரின் ஞான, கர்ம, பக்திக் கீற்றுகளை ஓரளவாகவாவது புரிந்து கொள்ள முயற்சி செய்வது, அவருடைய பல் வேறு விதமான ஆச்சரியப்பட வைக்கும் ஆளுமைகளை அவதானிப்பது, அவரால் எப்படி மிகப் பல விஷயங்களைச் செய்ய முடிந்தது &#8211; தன்னலம் கருதா தூய அறம் சார்ந்து &#8211; ஆன்மாவிலிருந்து அறிவியல் ஊடாக அஹிம்சை வழியில் அரசியலை நோக்கி, ஒவ்வொரு விஷயத்திலும் &#8211; அது உணவானாலும் சரி, நுண்நோக்கியானாலும் சரி, விரதமானாலும் சரி, நேரம் தவறாது இருத்தலும் சரி, பிறர் மலம் அகற்றி துப்புரவாக்குவதானாலும் சரி &#8211; உன்னதத்தை நோக்கி பயணம் செய்பவராக இருந்து, பளிச்சிடும் நேர்மையுடன் வாழ்நாள் முழுவதும் இருக்க முடிந்தது, அவர் எப்படி எப்போதுமே ஒரு மகத்தான செயல் வீரராக இருந்திருக்கிறார் என்று தியானம் செய்வது, அவரால் தூர் வாரப்பட்டு, வெளிச்சம் காட்டப்பட்டு, வாழ வைக்கப் பட்ட இந்தியப் பண்பாட்டின் பல்வேறு கூறுகளைப் பற்றிச் சிந்திப்பது &#8211; பல காலமாக எனக்கு கனவுக்கும் நனவுக்கும் இடையே உள்ள கலங்கிய, போதை கொண்ட எண்ணப் பரப்பில் இருந்திருக்கிறது.</p>
<p>ஆக, நான் ஒரு காந்தியைப் பற்றிப் புரிந்து கொள்ள நினைக்கும் <em>மாணாக்கன்</em> தான் என்பதில் மெய்யாலுமே பெருமையடைகிறேன்.</p>
<p style="text-align:center;"><strong>=-=-=-=</strong></p>
<p>ஆனால், நான் சிறிதளவு வெட்கத்துடன் ஆனால் நிறைந்த துக்கத்துடன் இதனைச் சொல்ல வேண்டும்:</p>
<p>சிறு வயதில் &#8211; இளம் வயதில், என் 20களின் ஆரம்பங்கள் வரை   -  நானும் காந்தி அவர்களை <em>காந்தியார்</em> என்று சொல்லும் கும்பலின் சகவாசத்தில் இருந்தவன் தான். கண்மூடித்தனமாக கம்யூனிசத்தையும், திராவிட இயக்கத்தையும் ஆதரித்தவன் தான். ஈவே ராமசாமி அவர்களைப் பெரியார் என்று, <em>விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராகவும்</em> பூஜித்தவன் தான்.</p>
<p>வாய்ப் பேச்சு வெட்டிவீரர்களை, புரட்டாளர்களை, புரட்டு வாதிகளை &#8211; <em>புரட்சியாளர்கள்</em> என்று கொண்டாடி புளகாங்கிதம் அடைந்தவன் தான்&#8230;</p>
<p>ஜாதி பற்றிய புரிதலோ, இந்து மதம் (அல்லது எந்த மதம் பற்றியும்) பற்றிய அடிப்படை அல்லது அனுபவ அறிவோ இல்லாமல், கடன் வாங்கப் பட்ட கோட்பாடுகளை அவிழ்த்துக் கொட்டிக்கொண்டிருந்தவன் தான். ஒரே புரட்சி தான். ஒரே புல்லரிப்பு. வினவு வினவு என்று ஒரே வினவு, என்ன சொல்ல அந்த <a href="http://www.vinavu.com/" target="_blank">வெட்கக் கேட்டைப் </a>பற்றி!</p>
<p>தாமஸ் பபிங்டன் மக்காலே (Thomas Babington Macaulay), வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் (William Wilberforce), மாக்ஸ்ம்யுல்லர் (Max Müller), வில்லியம் ஜோன்ஸ் (William Jones &#8211; ஆசியாடிக் ஸோசைடி, கல்கத்தா &#8211; இவர் செய்த குழப்படியும் அறிவுஜீவிய துரோகமும் தான், மிகப் பல பார்வைகளில், புத்தகங்களில் ஒரே ஒரு புத்தகமான-பார்வையான, பரவலாக அறியப் படாததான, மனு நீதி &#8211; மனு ஸ்ம்ரிதி &#8211; இந்து மதத்தின் ஆணிவேறாகக் கருதப் படக் காரணம்) &#8211; ஜியார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope), ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), &#8216;வீரமாமுனிவர்&#8217; கான்ஸ்டன்ஸோ பெஷி (Constanzo Beschi), ழான் அந்த்வான் துப்வா (Jean-Antoine Dubois &#8211; இவர் &#8211; &#8216;அப்பே துபொய்&#8217; என்று அறியப் பட்டு 1800-1823 வருடங்களில் மைசூர் சுற்றுப் புறங்களில் கிறித்துவ மதமாற்றம் செய்தவர் &#8211; மகத்தான கருத்தியல், இறையியல் மோசடிகள் பல செய்தவர்) போன்ற போலிப் பாதிரிகள் &#8211; போன்ற இத்தியாதிகள் மூலம் மட்டுமே இந்தியாவை, என்னுடைய சிறு வயதில், இளமையில் அறிந்திருந்தேன்&#8230; (பராசக்தி போன்ற ஒரு மலினமான பிரச்சாரப் படத்தை, ஒரு முறை கூடப்  பார்க்காமல் அதன் வசனங்கள் அத்துப் படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! <a href="http://othisaivu.wordpress.com/2011/10/07/post-172/">அடுக்கு மொழி பொறுக்கி நடை</a>க்குத் தான் இதெல்லாம் சாத்தியம்.)</p>
<p>இவை தவிர மார்சிய லெனினிய வெள்ளீய காரீய புத்தகங்கள் வேறு. &#8211; ஹெகேலில், மார்க்சிலிருந்து மாவோ வழியாக மார்குசே வரை ஏட்டுச் சுரைக்காயத்தனமாக கரைத்துக் குடித்து தள்ளாடிக் கொண்டிருந்தேன்&#8230; பின் சில பல வருடங்களுக்கு &#8216;இயங்கிக்&#8217; கொண்டிருந்தவனும் கூட&#8230; (நல்ல வேளை &#8211; அப்போது ஜார்கண்டிலும், சத்தீஸ்கட்டிலும் சமீபத்தில் கொல்லப்பட்ட கிஷேன்ஜி  போன்றவர்கள் இல்லை &#8211; அவ்வளவு வாயோர நுரை தள்ளியவர்கள், அயோக்கியத் தனம் நிரம்பியவர்கள், எனக்குத் தெரிந்த வரை அப்போது &#8216;இயக்கங்களில்&#8217; இல்லை)</p>
<p>=-=-=-=</p>
<p>ஏன் இப்படியானது என யோசிக்கிறேன்&#8230;  (திடுக்கிடும் தொடர்<em>வதை</em> தொடரும்)</p>
<p><a href="http://othisaivu.wordpress.com/page-4/">காந்தியாயணம்…</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/othisaivu.wordpress.com/802/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/othisaivu.wordpress.com/802/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/othisaivu.wordpress.com/802/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/othisaivu.wordpress.com/802/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/othisaivu.wordpress.com/802/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/othisaivu.wordpress.com/802/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/othisaivu.wordpress.com/802/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/othisaivu.wordpress.com/802/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/othisaivu.wordpress.com/802/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/othisaivu.wordpress.com/802/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/othisaivu.wordpress.com/802/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/othisaivu.wordpress.com/802/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/othisaivu.wordpress.com/802/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/othisaivu.wordpress.com/802/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=802&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://othisaivu.wordpress.com/2011/12/25/post-87/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b62814c6b255ed12bc7368885f18a79a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">ramasami</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இரங்கல்:  ஜான் மக்கார்த்தி</title>
		<link>http://othisaivu.wordpress.com/2011/12/14/post-86/</link>
		<comments>http://othisaivu.wordpress.com/2011/12/14/post-86/#comments</comments>
		<pubDate>Wed, 14 Dec 2011 08:08:54 +0000</pubDate>
		<dc:creator>ramasami</dc:creator>
				<category><![CDATA[ஆஹா!]]></category>
		<category><![CDATA[கணிதம்]]></category>
		<category><![CDATA[கணினியியல்]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[யாம் பெற்ற பேறு....]]></category>

		<guid isPermaLink="false">http://othisaivu.wordpress.com/?p=796</guid>
		<description><![CDATA[வர வர செய்தித்தாள் எதுவுமே படிப்பதில்லை என்கிற கங்கணம். விதி விலளக்காக, கார்த்திகைக்கு ஓர் நாள், சதுர்த்திக்கு ஓர் நாள் என்று எப்போதாவது படித்தால் அதிகம். பொதுவாக, தினசரிச் செய்திகளில் கொலை-ஊழல்-அழிவு இன்னபிற பற்றிய விவரங்கள் அதிகமென்பதால் ஒரு ஆயாசமும் அலுப்பும்&#8230; இவற்றைப் படிக்காமல் இருந்தாலே &#8211; நிம்மதியாக இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் என்றொரு எண்ணம். வாரம் ஒரு முறை, எனக்குப் பிடித்த இணைய தளங்களை ஒரு சுற்று வந்தால் அது அதிக பட்ச [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=796&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>வர வர செய்தித்தாள் எதுவுமே படிப்பதில்லை என்கிற கங்கணம்.</p>
<p>விதி வி<del>ல</del>ளக்காக, கார்த்திகைக்கு ஓர் நாள், சதுர்த்திக்கு ஓர் நாள் என்று எப்போதாவது படித்தால் அதிகம். பொதுவாக, தினசரிச் செய்திகளில் கொலை-ஊழல்-அழிவு இன்னபிற பற்றிய விவரங்கள் அதிகமென்பதால் ஒரு ஆயாசமும் அலுப்பும்&#8230; இவற்றைப் படிக்காமல் இருந்தாலே &#8211; நிம்மதியாக இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் என்றொரு எண்ணம்.</p>
<p>வாரம் ஒரு முறை, எனக்குப் பிடித்த இணைய தளங்களை ஒரு சுற்று வந்தால் அது அதிக பட்ச செய்தி / விவர நுகர்வு. இது தவிர சில சமயம் சில இடுகைகள். விட்டுப் போன டெல்லியிலிருந்து சென்னை வந்த <strong>கனிப் பெயர்ச்சி</strong>ச் செய்திகள்&#8230;</p>
<p style="text-align:center;"><strong>=-=-=-=</strong></p>
<p>கடந்த சில தினங்களாக, முதுகெலும்பை, தண்டு வடத்தைப் பதம் பார்த்த கட்டிட, கான்க்ரீட் போடும் வேலை &#8211; எனக்குத் தெரிந்த இளைஞர்களின் மையக் கட்டுமானப் பணிகளுக்காக கொஞ்சம் சிரம தானம்.</p>
<p>இன்று எங்கள் பள்ளியில் அரையாண்டுத் தேர்வுகள் துவங்கிவிட்டன&#8230; ஆகவே , கொஞ்சம் விடுதலை &#8211; 3 மணிநேரங்கள், கையில் கிடைத்தன&#8230;</p>
<p>ஆகக் காலையில் வந்து  மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தால் &#8211; ஒரு வருந்தத்தக்க செய்தி &#8211; <a href="http://www-formal.stanford.edu/jmc/பர்சனல்.html">ஜான் மக்கார்த்தி</a> (John McCarthy)என்கிற மகத்தான கணிப்பொறியாளர் 24 அக்டோபரிலேயே <a href="http://news.stanford.edu/news/2011/october/john-mccarthy-obit-102511.html">மறைந்த விஷயம்</a>.</p>
<p>லிஸ்ப் (LISP) என்றொரு அற்புதமான கணினி மொழியை கண்டு பிடித்தவர் -  இந்த ஜான் (1927 &#8211; 2011). மிகப் பல கல்யாண குணங்களையும் கொண்டவராக இருந்தார்.  இவர்  கணினியியலிலும், அது சார்ந்த கருத்தாக்கங்களிலும் பல உயரங்களை எட்டியவர்&#8230; அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவரும், பண்பு மிக்கவரும் கூட.  (சற்றொப்ப, பதினைந்து வருடங்கள் முன் இவரிடமிருந்து வந்த மின்னஞ்சலை இன்னமும் நான் சிறு குழந்தையின் பொக்கிஷம் போலப் பாதுகாத்து வருகிறேன் )</p>
<div id="attachment_797" class="wp-caption aligncenter" style="width: 460px"><a href="http://othisaivu.files.wordpress.com/2011/12/john-mccarthy-1957-2007.jpg"><img class="size-full wp-image-797" title="john-mccarthy 1957, 2007...." src="http://othisaivu.files.wordpress.com/2011/12/john-mccarthy-1957-2007.jpg?w=530" alt=""   /></a><p class="wp-caption-text">ஜான் மக்கார்த்தி - அன்று 1957-ல் இளைஞராக, பின் 2000-களில்...</p></div>
<p>நான் விளையாட்டாக இந்த லிஸ்ப்-இன் வழி கணினியியலுக்குப் போனவன்; மேலும் செல்லும் இடமெல்லாம் கிறிஸ்தவக் கிளிப்பிள்ளைப் பாதிரியார்களைப் போல இந்த லிஸ்ப் மொழி மதத்தினால்தான் கணினியியலை ஒருவர் அறிந்து தெளிந்து உய்ய முடியும் என எண்ணியவன் (எண்ணுபவனும் கூட).</p>
<p>அக்கால கணினி மொழிகளில் இருந்து சமீபத்திய ரூபி வரை ஓரளவு அறிந்தவன் என்கிற முறையில் (நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன &#8211; கடைசியாக நான் கணினிமொழிக் கட்டளைகள் / உத்தரவுகள் இட்டு) &#8211; என்னால் சொல்ல முடியும் &#8211; இப்போதும் லிஸ்ப் வழி ஒருவர் கணினியியலை அணுகுவார் என்றால் அவருக்கு சகல சௌபாக்கியங்களும் கைக்கூடும். &#8211; கணினி சரஸ்வதி அவள்தம் கடைக்கண் பார்வை மட்டுமல்லாமல், முதற் கண் பார்வையே உங்கள் மீது விழும்.</p>
<p><a href="http://www.csse.monash.edu.au/~lloyd/tildeFP/Lambda/Ch/">லாம்ப்டா கால்குலஸ்</a> என்கிற மகத்தான பூதத்தை உள்ளடக்கிய இந்தப் புதுமை லிஸ்ப்-ன் சொல்லும் செயலும், பொய்மை கொண்ட ஜாவா-க்களுக்கும் C++களுக்கும் புதிதே அன்றி&#8230; (மன்னிக்கவும்)</p>
<p>லிஸ்ப் <strong>அழகானது</strong>. ஆரவாரமற்றது. <strong>அமைதி</strong>யானது. இயல்பான நடையை, மொழியை, வீச்சை உள்ளடிக்கியது. நம்மை மிகவும் <strong>யோசிக்கத்</strong> தூண்டுவது. மிக மிகச்<strong> சுலபமானது</strong>.</p>
<p>இதன் அழகுக்காக, அழகுணர்ச்சிக்காக, தேவையற்றவையவை ஒதுக்கி முக்கியமானதை முழு மூச்சோடு செய்யும் தன்மைக்காக, இதனைக் கற்றுக் கொள்ளலாம் &#8211; நாம் அனைவரும்! கணிபபொறிக்குக் கூட அவசியமே இல்லை.</p>
<p>முதலில் <a href="http://schemers.org/">ஸ்கீம்</a> (Scheme) என்கிற லிஸ்ப்-ன் குட்டிப் பையன் மூலமாக நீங்கள் அணுகினால், இது இன்னமும் அழகு.</p>
<p>மகத்தான கணினி விஞ்ஞானி ஜான் மக்கார்த்தியின் ஆன்மா இப்பிரபஞ்ச வெளியில், ப்ரும்மத்தில் கலந்து கரையக் கரைய, நம்முலகில் அழகுணர்ச்சி  பெருகும். பெருக வேண்டும்&#8230;</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/othisaivu.wordpress.com/796/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/othisaivu.wordpress.com/796/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/othisaivu.wordpress.com/796/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/othisaivu.wordpress.com/796/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/othisaivu.wordpress.com/796/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/othisaivu.wordpress.com/796/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/othisaivu.wordpress.com/796/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/othisaivu.wordpress.com/796/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/othisaivu.wordpress.com/796/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/othisaivu.wordpress.com/796/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/othisaivu.wordpress.com/796/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/othisaivu.wordpress.com/796/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/othisaivu.wordpress.com/796/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/othisaivu.wordpress.com/796/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=796&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://othisaivu.wordpress.com/2011/12/14/post-86/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b62814c6b255ed12bc7368885f18a79a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">ramasami</media:title>
		</media:content>

		<media:content url="http://othisaivu.files.wordpress.com/2011/12/john-mccarthy-1957-2007.jpg" medium="image">
			<media:title type="html">john-mccarthy 1957, 2007....</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>&#8216;சில்லறை&#8217; வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது: கருணாநிதி</title>
		<link>http://othisaivu.wordpress.com/2011/12/10/post-85/</link>
		<comments>http://othisaivu.wordpress.com/2011/12/10/post-85/#comments</comments>
		<pubDate>Sat, 10 Dec 2011 10:24:46 +0000</pubDate>
		<dc:creator>ramasami</dc:creator>
				<category><![CDATA[அறிக்கைப் புழுக்கை]]></category>
		<category><![CDATA[தமிழர் பண்பாடு]]></category>
		<category><![CDATA[ரசக்குறைவான நகைச்சுவை]]></category>
		<category><![CDATA[DMK]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[tamil]]></category>

		<guid isPermaLink="false">http://othisaivu.wordpress.com/?p=791</guid>
		<description><![CDATA[நமக்குத் தெரியாதா &#8211; &#8216;சில்லறை&#8217; வணிகம் வர்த்தகம் என்றால் நம் கருணாநிதி அவர்களை, அவர்களின் முந்நூற்றுச் சொச்சம் குடும்ப அங்கத்தினர்களை மிஞ்ச, இப் பிரபஞ்சத்தில் வேறு மனிதர்களே கிடையாது என்பது. ஆனால்,  நமக்கு  இன்னொரு  உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது &#8211; அதாவது, நம் பெரு மிதிப்பிற்குடைய கருணாநிதி அவர்களின் &#8212; நம் பாவப் பட்ட தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பாலும், அகில இந்தியா முழுவதும் உலா வரும் ஊழல் சில்லறைப் பண வாணிகமும் தம்மிடம் தான் வரவேண்டும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=791&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>நமக்குத் தெரியாதா &#8211; &#8216;சில்லறை&#8217; வணிகம் வர்த்தகம் என்றால் நம் கருணாநிதி அவர்களை, அவர்களின் முந்நூற்றுச் சொச்சம் குடும்ப அங்கத்தினர்களை மிஞ்ச, இப் பிரபஞ்சத்தில் வேறு மனிதர்களே கிடையாது என்பது.</p>
<p>ஆனால்,  நமக்கு  இன்னொரு  உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது &#8211; அதாவது, நம் பெரு மிதிப்பிற்குடைய கருணாநிதி அவர்களின் &#8212; நம் பாவப் பட்ட தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பாலும், அகில இந்தியா <strong><em>முழுவதும்</em></strong> உலா வரும் ஊழல் சில்லறைப் பண வாணிகமும் தம்மிடம் தான் வரவேண்டும் என்கிற <em>அடக்க முடியாத ஆவல்</em>.</p>
<p>மேலும், நேற்று முளைத்த ஊழல் மழையில் இன்று முளைத்த பெருச்சாளிக் காளான்களான ஜெகன்மோகன் ரெட்டிகள், குமாரசாமிகள், ராசாக்கள், எடியுரப்பாக்கள், வீரிட்டுக் கொண்டெழுந்து பணம் செய்வதையும் &#8211; கலைங்கர் கருணாநிதி ஏற்றுக் கொள்ளாமையை நாம் தெரிந்து தெளியக் கூடியதே&#8230;</p>
<p>ஆகவே,  மேற்கண்டவைகளுக்கு மேலாக இவர்,  அந்நிய சோனியா கும்பலின் ஊழல்களால் &#8211; தமக்கு வேண்டிய அளவு பணம் கிடைக்க மாட்டேன் என்கிறதே, இன்னும் 2700 தலைமுறைகளுக்கு மட்டுமே <em>தானே</em> நாம் சொத்துச் சேர்த்திருக்கிறோம் என்கிற சோகத்தால் வெந்து கொண்டிருப்பதும் நாம் புரிந்து கொள்ளக் கூடியதே.</p>
<p>பாவம், இப்படி ஒரு நிலைமை வரலாமா, <em>நம் </em> தானைத் தலீவருக்கு?</p>
<p>ஆகவே இவர் சோனியா காந்தியை நேரே குற்றம் சாட்ட தைரியமில்லாமல் இப்படி குழப்படி செய்கிறார் என நினைக்கிறேன்.</p>
<p>உங்களுக்குச் சரியாகப் புரிவதற்காக, குழப்படி  <a href="http://www.election.dinakaran.com/LatestNews_2011.asp?Nid=6884">தினகரன் செய்தி</a>யை உண்மையாக நான் உங்களுக்கு மொழி &#8216;பெயர்த்துத்&#8217; தருவதில்  பெருமை(!) அடைகிறேன்! &#8230;</p>
<blockquote><p>சென்னை : சில்லறை வணிகத்தில் சோனியா குறுக்கீட்டை அனுமதிப்பதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். சில்லறை வணிகத்தில் சோனியா குறுக்கீட்டை  அனுமதித்தால் எங்கள் குடும்பத்தின்  பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும் எனவே இம்முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>சோனியா குறுக்கீட்டால் எம் குடும்ப வர்த்தகம் தனது வாழ்வாதாரத்தை இழந்து விடும் என்றும் சோனியா குறுக்கீட்டால் எங்கள்  சிறுவணிகத்தில் பொருளாதார சீர்கேடு என்ற சுனாமி ஏற்படும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.</p></blockquote>
<p><a href="../page-2/">திமுக (எதிர்ப்)பக்கங்கள்…</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/othisaivu.wordpress.com/791/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/othisaivu.wordpress.com/791/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/othisaivu.wordpress.com/791/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/othisaivu.wordpress.com/791/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/othisaivu.wordpress.com/791/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/othisaivu.wordpress.com/791/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/othisaivu.wordpress.com/791/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/othisaivu.wordpress.com/791/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/othisaivu.wordpress.com/791/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/othisaivu.wordpress.com/791/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/othisaivu.wordpress.com/791/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/othisaivu.wordpress.com/791/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/othisaivu.wordpress.com/791/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/othisaivu.wordpress.com/791/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=othisaivu.wordpress.com&amp;blog=21589800&amp;post=791&amp;subd=othisaivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://othisaivu.wordpress.com/2011/12/10/post-85/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b62814c6b255ed12bc7368885f18a79a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">ramasami</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
