DANGER! N0H0P3 idiot flu virus pandemic
30/07/2015
[ This post is an old one, a version of which was written may be 6/7 years back or so. It is provided here purely for ‘educational’ purposes. ;-) ]
…Are you afraid that you are going to be one of those people who may die because of this A(H1N1) swine flu virus?
If you indeed do, probably you deserve to die ASAP one way or the other, anyway… Good riddance too.
This is because, you did not bother to check the facts.
You did not bother to read, digest, reflect on what’s happening. Read the rest of this entry »
பயப்படாதீர்கள்.
(அல்லது) முஸ்லீம் சான்றோர்கள்-சிந்தனையாளர்கள், தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் அவரவர்களின் சொந்தக் காரணங்களிளால் காரியஅமைதி காக்கும்போது — அற்ப அரைகுறை ஜிஹாதிகளை ஆகர்ஷித்து அவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது எப்படி :-)
பகீர் செய்தி!
சென்னை, 23 ஜூலை, 2015: முன்னதாக, தன்மானத் தலைவர் நிகரிலா திராவிடர் திலகம், இனமானச் செம்மல், கி. வீரமணி அவர்கள், சிங்கப்பூர் சென்றிருந்தபோது சொகுசாக ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன்னுடைய செல்லமான கற்பனைக் கோவேறுகழுதை****யின்மீது ஆரோகணித்து ‘அமெரிக்க உளவியல் சங்கம்’ பற்றிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பை அவரோகணித்தார்.
மேலும் ‘திராவிட உளறியல் சங்கம்’ எனும் தன் சொந்த சங்கத்தின் சங்கதிகளையும் கலந்து கமகமா என்று பரிமாறினார். அதாவது பரி நரியாகி, நரி சொறியாகி மாறி மாறி, படு அற்புதமாகக் காட்சிதந்து பரிமாறப்படும் திராவிளையாடல் புராணக்கதைதான் இது! Read the rest of this entry »
சிலநாட்கள் முன்பு இந்த மெஹ்ஃபில்லுக்குச் சென்றிருந்தேன்; பள்ளியில், மரங்கள் சூழ்ந்த கும்மிருட்டுச் சூழலில், ஒரு பெரிய ஒலைக்குடிலில், சில இசை ஆர்வலர்களுக்கென நடத்தப்பட்ட நிகழ்ச்சி. நிறைய பள்ளிக் குழந்தைகளும் இருந்தார்கள்.
த்ருபத் வகை இசையை ரசிப்பதற்கு ஒரு உல்லாசம், சாவகாசம் வேண்டும். கடிகாரத்தைப் பார்க்காமல் இருக்கவேண்டும். மெல்ல மெல்ல மேலெழும்பும் இசை இது. அவசரகதியில் அள்ளித்தெளிக்கும் படாடோப இசை வல்லமை இதில் இல்லை. ஆனால் நுணுக்கங்கள்? ஆஹா தான்!
Read the rest of this entry »
‘விடுதலை’ வீரமணி இப்படிப்பட்ட சிரிப்போதிசிரிப்பு முட்டாள் தனத்தையும் செய்வாரா? ஆச்சரியம்தான்!
21/07/2015
திராவிடப் பகுத்தறிவு என்பதன் லட்சணமே, ஆதார சுருதியே, அடி நாதமே – மூட நம்பிக்கைக் குவியல்தான்; அதாவது ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் பிதற்றல்களைக் கொள்கைகளாகக் கொள்வது; அவரது விட்டேற்றி வெறுப்புப் பிரச்சாரங்களைத் தாரக மந்திரங்களாக உச்சாடனம் செய்வது; ஆரிய மாயை; திராவிடத் திராபை; லெமூரியா; இன்னபிற, இன்னபிற…
திராவிட அறிவியல் என்பதே ஒரு ஆக்ஸிமொரான் – அதாவது அறிவியலுக்கும் திராவிடத்துக்கும் ஒரு சுக்குச் சம்பந்தமும் இல்லை.
திராவிடனும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
20/07/2015
(அல்லது) ஏகபோக திராவிடக் காப்பிக்கடை நிறுவனரும், தழுவல் சக்ரவர்த்தியுமான மானமிகு யுவகிருஷ்ணனாரும், பிதுங்கிவழியும் பாற்சுரப்பிப் படங்களும்
…இவருக்கு வெட்கம் என்பது துளிக்கூட இல்லை. மானத்தையே விடுங்கள் – ஏனெனில், அவர் ஒரு திராவிடலை என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்; கஜினியின் மொஹெம்மத் கொள்ளை அடித்தே காலத்தை ஓட்டியது போலத்தான், இவரும் வெட்டியொட்டியே ‘தொழிலை’ நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரிகிறது; இருந்தாலும், பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக இழிவுபடுத்தி, ஒரு போகப் பொருளாக மட்டுமே ஆண்குறி வீங்க சிந்திப்பவர்(!) எனப் பிரத்தியட்சமாகத் தெரியவரும்போது – சீ, இந்த இளைஞனா திருந்தப் போகிறான் என்று தோன்றுகிறது.
மானமில்லாமல் – படுகேவலமாகத் திருவோடு ஏந்தி உலகெல்லாம் பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் பாரத கலாச்சாரத்தை உய்விக்க, அட்டைக்கத்தி (= கத்தி + கத்திக்கத்தி) போராட்டங்களை டீவி கேமராக்கள் முன் ஏகோபித்து மினுக்கிக்கொண்டு நடத்த, சமூக நீதிக்காகவென என்றெல்லாம் இந்தியாவில் பலப்பல என்ஜிஓக்கள் – எழவெடுத்த தன்னார்வ போங்காட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.
இவை பெரும்புகழும் பேரும் பெற்று – தொந்தி தள்ளக் கொழுத்து, நடக்கமுடியாமல் ஆனால் வீராவேசம், சமதர்மம், மனித உரிமை, பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூக/இயற்கைச் சூழல் பாதுகாப்பு என அலைந்து கொண்டிருக்கும் இருக்கும் மனிதர்களால் – மன்னிக்கவும், தொழில்முறைக் கொள்ளையர்களால் நடத்தப் படுகின்றன.
Read the rest of this entry »
கடந்த சிலவருடங்களாகவே ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அவர்களின் அமைப்பு – உலகளாவிய பார்வையுடன் சமூகச் சிடுக்கல்கள், கொடும்தீவிரவாதங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அதன் பாவப்பட்ட மனிதத் திரள்களுக்காக களப்பணி ஆற்றி வருகிறது. ஆனால், இதனைப் பற்றி அது தம்பட்டமோ, போஸ்டரோ அடிப்பதில்லை. பெரும் நம்பிக்கையையும் உழைப்பையும் மட்டுமேகொண்டு அவ்வமைப்பினரும் அவர்கள் தலைவரும், படாடோபமில்லாமல், வீண்விளம்பரமில்லாமல் பணி செய்து வருகின்றனர்.
இந்த வரிசையில் முதல் பதிவு: இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில கருத்துகள் (1/3); இதனைப் படித்து விட்டுத் தொடரலாம் – உங்களுக்கு இதனைப் படித்தேயாக வேண்டுமென்றால்…
(தொடர்ச்சி) இப்பதிவு வரிசையை, நான் இப்போது எழுதுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள்:
-0-0-0-0-0-0-
(அல்லது) ரமதான் மாத மனஅழுத்தங்கள்
… என் மகன், அவன் வகுப்புக் குழந்தைகளுடன் பள்ளிக்கு அருகில் இருக்கும் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை கிராமத்துக்கு – சென்றவாரம் போயிருந்தான்; மதியத்திலிருந்து சாயங்காலவேளை வரை அவர்கள் அங்கு கழித்திருக்கிறார்கள். மாலை மயங்கும் நேரத்தில் அக்கிராமத்தினர் அன்புடன் அளித்த இஃப்தார் விருந்தில் (ரமதான் நோன்பு முடிக்கும் தருணம்) கலந்துகொண்டு, அங்குள்ள மதறாஸாவின் குழந்தைகளுடன் அளவளாவி கண்டமேனிக்கும் இனிப்புகளை சந்தோஷமாக, வயிறு உப்ப உண்டுவிட்டு – வீட்டுக்கு வந்து, இரவு உணவுவேண்டாம் என்று சொல்லித் தூங்கியே விட்டான். :-)
![என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: ... [நாம் வீட்டில் பாடும்] அல்லாஹூ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் - அதன் பெயர் முஸ்தஃபா. அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது... ...](https://othisaivu.files.wordpress.com/2015/07/screenshot-from-2015-07-09-211242.png?w=300&h=232)
என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: … [நாம் வீட்டில் பாடும்] ‘அல்லாஹூ’ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் – அதன் பெயர் ‘முஸ்தஃபா.’ அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது… …
ஆனால் இப்பேச்சு கொடுத்த உந்துதலால், மேலதிகமாகச் சிலபல காரணங்களால், நான் இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். :-(